Tuesday, October 6, 2015

தாராளமாய் பன்றிக்கறி சாப்பிடுங்கப்பா!

 Image result for pork chops

மனிதக் கறி தின்னுகிற காவிக் கூட்டம் மாட்டுக் கறி சாப்பிடுபவர்கள் மீது  அனைத்து விதமான தாக்குதல்களையும் நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது.

அதிகாரம் கையில் உள்ள இடத்தில் சட்டத்தின் மூலமாய் தாக்குதல் நிகழ்த்துகிறார்கள்.  ரௌடிகள் கூட்டம் அதிகமாய் இருக்கும் இடத்தில் உயிரை எடுக்கிறார்கள். தமிழகம் போன்ற இடங்களில் மாட்டுக் கறி சாப்பிடுவேன் என்று சொல்பவர்களை எவ்வளவு ஆபாசமாக பேச முடியுமோ அவ்வளவு அசிங்கமாக திட்டுகிறார்கள்.

முகநூலில் ஒரு பெண் தோழரை மிகக் கேவலமாக பேசி, உலகிலேயே மிகவும் இழிவான பிறவிகள் காவிக் கூட்டம்தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார்கள்.

மாட்டுக் கறி என்பது ஏழை மக்களின் உணவு. என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது ஒவ்வொருவருடைய அடிப்படை உரிமை. அதில் தலையிட யாருக்கும் உரிமையும் கிடையாது. கேள்வி கேட்கவோ, தடை போடவோ யாருக்கும் அருகதை கிடையாது. மனிதர்களை மதிக்காத சங் பரிவார வானரக் கும்பலுக்கு கண்டிப்பாக கிடையாது.

மாட்டுக் கறி உண்பதற்கு எதிராக பன்றிக்கறி சாப்பிடும் போராட்டம் நடத்தப் போவதாக தமிழகத்தின் அதி மேதாவி ஹெச்.ராஜா அறிவித்துள்ளார்.

பன்றிக்கறி சாப்பிடக் கூடாது என்று யாருமே எங்குமே தடை விதிக்கவில்லையே. தாராளமாய் சாப்பிடுங்களேன். யார் வேண்டாம் என்று சொல்வது? 

இந்த அறிவிப்பே இவர்கள் எவ்வளவு வெறி பிடித்த முட்டாள் கூட்டம் என்பதற்கான சான்று.
 

2 comments:

  1. ஒரு பண்ணி பன்றிக்கறி சாப்பிட்டால் என்னப்பா தப்பு.
    குறிப்பு: ராஜாவை இங்கு பன்றி என்று கூறியதாக எடுத்துகொள்ளவேண்டாம்!

    ReplyDelete
  2. bjp downfall started with beef.....

    no one can stop....

    seshan

    ReplyDelete