Sunday, October 4, 2015

இந்த கேசையும் கவனியுங்க, அம்மாஜி

 

இடதுசாரிக் கட்சிகளின் வலியுறுத்தலால் 2005 ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வன உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. 

ஆனால் பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் மட்டும் ஒரு மலைவாழ் மக்களுக்குக் கூட அவர்கள் குடியிருக்கும் இடத்தின் பட்டா வழங்கப் படவில்லை. ஒரு பட்டா கூட வழங்கப்படாத ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. திமுக, அதிமுக இரண்டு அரசுகளுமே வன உரிமைச் சட்டத்தை அமலாக்குவது பற்றி கவலைப்படவில்லை.

வனத்தை பாதுகாக்கிற, வனத்தின் உண்மையான சொந்தக்காரர்களான மலைவாழ் மக்களுக்கு  அவர்களுக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவைக் கொடுத்தால் காட்டு விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என சில தீய எண்ணம் கொண்டவர்கள் வழக்கு தொடுக்க சென்னை உயர்நீதி மன்றமும் ஒரு பிற்போக்குத் தனமான தடை உத்தரவை வழங்கி வன உரிமைச் சட்டத்தின் அமலாக்கத்தை நிறுத்தி வைத்துள்ளது. அந்த தடையை நீக்குவதற்கான முயற்சிகளையோ, மேல் முறையீட்டையோ இரண்டு கழக அரசுகளும் செய்யவில்லை.

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் சேர்ந்த பெரிய புள்ளிகள், போலி ஆவணங்கள் மூலம் மலைகளை, காடுகளை அழித்து பெரிய பெரிய உல்லாச மாளிகைகள  கட்டிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கு தொடுத்த அந்த மனிதர்கள், இவர்கள் இயற்கையை அழிப்பது பற்றியோ, இயற்கை வளத்தை சுரண்டுவது பற்றியோ கவலைப்படுவது கிடையாது.

உங்கள் மீதான் ஊழல் வழக்குகளிலிருந்து வெளி வருவதற்கு ஏராளமான முயற்சிகளை செய்து கொண்டிருக்கிற தமிழக முதல்வர் அம்மாஜி அவர்களே, வன உரிமைச் சட்டத்தின் மீதான தடையாணையை அகற்ற என்ன செய்யப் போகிறீர்கள்? 

இந்தியாவிலிருக்கிற பிரபல வழக்கறிஞர்களையெல்லாம் உங்களை விடுவிப்பதற்காக கொண்டு வந்து நிறுத்த முடிகிற உங்களால் ஏன் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க எந்த சட்டபூர்வமான நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை?

உங்கள் வழக்குகள் மீது காண்பிக்கும் அக்கறையில் சிறு பகுதியையாவது இந்த மண்ணின் பூர்வ குடிகளுக்கான உரிமைகளை வழங்குவதற்கான வழக்கிலும் செலுத்துங்கள்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநாட்டு பொதுக் கூட்டத்தில்
மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
தோழர் பிருந்தா காரத்.

திருவண்ணாமலையில் நேற்று.
பட உதவி : தோழர் கருப்பு கருணா


 

No comments:

Post a Comment