Saturday, October 10, 2015

அயோக்கியன்+கொலைகாரன்=பாஜக எம்.எல்.ஏ




மாட்டுக்கறி தின்றதாக வதந்தியைப் பரப்பி ஒரு உயிரைக் கொல்ல காரணமாக இருந்த மனிதன், கொலை செய்த பாவிகளை விடுதலை செய்ய முயற்சிகள் மேற்கொண்டிருக்கும் மனிதன், இப்போதும் அதே பகுதியில் வெறியேற்றும் பேச்சுக்களை பேசி உசுப்பேற்றிக் கொண்டிருக்கும் ஒரு மனிதன், ஏற்கனவே முசாபர் நகர் பகுதியில் கலவரங்களை தூண்டி ரத்தம் குடித்த ஒரு காட்டேரி சங்கீத் சோம் எனும் பாஜக எம்.எல்.ஏ.

மாட்டுக்கறிக்கு எதிராக ஜீவகாருண்யத்துடன் செயல்படுகின்ற, இஸ்லாமியர்களுக்கு எதிராக நச்சைக் கக்குகிற இந்த சங்கீத் சோம் செய்கிற தொழில் என்ன தெரியுமா?

மாமிச ஏற்றுமதி, தோல் ஏற்றுமதி.

யாரோடு தெரியுமா?

ஒரு இஸ்லாமிய வணிகரோடு இணைந்து.

இந்தியாவின் மிகப்பெரிய மாமிச ஏற்றுமதி நிறுவனமான "அல் துவா" நிறுவனத்தில் இந்த மனிதனும் ஒரு இயக்குனர். கம்பெனி நிறுவதற்கான ஆவணங்களில், அதன் வியாபாரம் என்ன என்று விளக்கி கையெழுத்து போட்டுள்ள இயக்குனர்.

இன்றைய ஹிந்து பத்திரிக்கையில் முழுமையான விபரங்கள் வந்துள்ளது. அவசியம் படியுங்கள். முதல் பக்க கட்டுரையின் இணைப்பு இங்கே உள்ளது 

அரசியல் லாபத்திற்காக முஸ்லீம்களை எதிர்ப்பாராம்.
பண லாபத்திற்காக முஸ்லீமோடு வியாபாரம் செய்வாராம்.

அரசியல் லாபத்திற்காக மாட்டுக்கறியை எதிர்ப்பாராம்.
ஆனால் அதையே வெளிநாட்டிற்கு அனுப்புவாராம்.

கால்நடைகள் மீது கருணை காண்பிப்பாராம்.
ஆனால் மனிதர்கள் கொல்லப்பட வெறியூட்டூவாராம்.

அயோக்கியத்தனம் என்பதற்கு பாஜககாரர்கள் எவ்வளவு அழகாக பொருந்துகிறார்கள்.
 

2 comments:

  1. இவரின் செயல் தமிழ்பட வில்லன்கள் செய்கிற மாதிரியிருக்கே.

    ReplyDelete
  2. வெறும் அரசியலுக்காக இவர்கள் செய்வது, எந்த அளவுக்கு இந்தியச் சமூகத்தைப் பாதிக்கும் என்பது தெரியாமல் (அல்லது தெரிந்தோ) இருக்கிறார்கள். மக்கள் பிளவு படுவதற்கு இந்த மாக்களே போதும். நஞ்சைக் கக்கிக் கக்கி நல்லவர்கள் எல்லோரையும் கெட்ட சிந்தனை கொள்ளச் செய்யும் விஷக் கிருமிகள் இவர்கள். (பா.ஜ.கா என்று பொதுவாகக் கூறக்கூடாது. அவர்கள் தலைமையே இந்த விஷக் கிருமிகளை அடக்க வேண்டும்)

    ReplyDelete