முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்தவர் பொன்ராஜ்.
இவர் விஜய் ரசிகைகளை மிகவும் கீழ்த்தரமான வார்த்தை மூலம் கொச்சையாக திட்டியுள்ளார். சில விஜய் ரசிகைகள் பேசுவது எரிச்சலூட்டும் என்பது வேறு விஷயம். அவர்களை தற்குறிகள் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்றால் அவர்கள் முதிர்ச்சியில்லாமல் பேசுவது கவலையோடு பார்க்க வேண்டிய ஒன்று.
அதற்காக ஒட்டுமொத்தமாக அனைத்து விஜய் ரசிகைகளையும் கேவலமாக சித்தரிப்பதும், சர்ச்சை உருவான பிறகும் வருத்தம் தெரிவிக்காமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என பிடிவாதம் பிடிப்பதும் மோசமான அணுகுமுறை.
அப்துல் கலாம் அவர்களோடு நெருக்கமாக இருந்ததாக பொன்ராஜ் சொல்வார். அப்துல் கலாமிடமிருந்து எதுவும் கற்கவில்லை போல . அப்துல் கலாம் உயிரோடு இருந்திருந்தால் இவரது செய்கையை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.
இவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:
Post a Comment