Saturday, March 7, 2026

சோ.அதர்மனை கேட்டது விகடனின் கொழுப்பு

 


ஜெயமோகனுக்கு  பாத பூஜை செய்து,  தந்தை பெரியார், அறிஞர் அன்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரை வசை பாடவே ஒரு நாவல் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்று,.   அந்த கெத்தை விடாமல் தக்க வைக்க கிறிஸ்துவர்களை இழிவு செய்து இன்னொரு நாவல் எழுதி, தான் இழிவு படுத்திய கலைஞரின் மகனிடமிருந்தே வீட்டிற்கான பத்திரத்தை வெட்கமே இல்லாமல் வாங்கிக் கொண்ட சோ.அதர்மன் போட்ட முகநூல் பதிவு கீழே.


ஒரு மிகப் பெரிய மக்கள் தலைவரை, சுதந்திரப் போராட்ட வீரரை, பொதுவுடமை போராளியைப் பற்றி  சங்கிகளுக்கு சேவகம் செய்வதையே பிறவிக்கடனாக நினைத்திருக்கும் அதர்மனிடம் கேட்டது விகடனின் கொழுப்பு. 

திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர், இப்போது பக்கவாதம் வந்துள்ள ஐகோர்ட் எச்.ராசா ஆகியோரைப் பற்றி கேட்டிருந்தால் சந்தோஷமாக வெண்முரசு அளவிற்கு விஷயங்களை அள்ளி வீசியிருப்பார். 

மிகச் சரியான ஒரு மனிதரைப் பற்றி தவறான மனிதனிடம் கேட்டால் இப்படித்தான் திமிர்த்தனமாக பதில் வரும். 

பிகு 1 : அவருக்கு அங்கேயே சூடாக பதில் கொடுத்தேன்.

பிகு 2 : சோ.அதர்மனின் பதிவுக்கு விருப்பக்குறி கொடுத்திருந்த பேராசிரியர் தோழர் ராஜன்குறை கிருஷ்ணன், தோழர் நல்லக்கண்ணுவிற்கு அஞ்சலி பதிவும் எழுதியிருந்தார். அஞ்சலியும் எழுதி விட்டு அதர்மனுக்கு விருப்பக்குறி இட்டதும் வினோதமாக உள்ளது என்று அங்கே எழுதியிருந்தேன். வாய்ப்பில்லையே என்றார். ஸ்க்ரீன் ஷாட்டை போட்டதும் அகற்றி விட்டு, இந்த தவறு எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை என்று பதில் போட்டிருந்தார்.

பிகு 3 : அதர்மனுக்கு விருப்பக்குறி இட்ட இன்னொரு பிரபலம் கவிஞர் தாமரை - அவருக்கு தோழர் நல்லக்கண்ணு மேல் என்ன வெறுப்போ?

பிகு 4 : சோ.அதர்மனோ இல்லை பேராசிரியர் ராஜன்குறை கிருஷ்ணனோ,  அவர்களது பதிவுகளில் நான் நேரடியாக ஒளிந்து கொள்ளாமல்தான் பதிவிடுகிறேன். என் பதிவுகளில் வந்து ஒளிந்து கொண்டு ஆபாச வார்த்தைகளில் பேசும் அனாமதேயங்களுக்கு மட்டும் ஏன் அந்த நேர்மை கிடையாது? மொட்டைக்கடிதங்களில் வாழும் கேடு கெட்ட ஜென்மங்கள் சாகும் வரை ஒளிந்து கொண்டுதான் வசை பாடும்.


No comments:

Post a Comment