Monday, March 16, 2026

பெருமையும் நிறைவும் அளித்த விருது

 


மோடி அரசின் கலாச்சாரத்துறையின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 2025 ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது ஒருவழியாக இன்று அறிவிக்கப்பட்டு விட்டது.

கால தாமதமானாலும் மிகச் சரியான ஒருவருக்கே இந்த ஆண்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழின் முன்னணி எழுத்தாளரான தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு "தமிழ்ச்சிறுகதையின் தடங்கள்" நூலுக்காக அளிக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு சென்னை புத்தக விழாவில் வாங்கியுள்ளேன். விரைவில் படிப்பேன்.

தோழர் ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர் மட்டுமல்ல, அரசியல், கலை, பண்பாடு என பல தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் அமைப்பாளர். முன்னாள் ராணுவ வீரரான அவர் அஞ்சல் தொழிற்சங்கத்தில் பொறுப்பாளராக செயல்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் ஆணி வேராக திகழும் தோழர்.

தஞ்சை மாவட்டத்தில் நிலப்பிரப்புத்துவக் கொடுமைக்கு எதிராக நடைபெற்ற எழுச்சியை அவரது புதிய நூலான "திருப்பி அடித்த வரலாறு" சொல்லும். 

மிகச் சிறந்த சிறுகதைகளையும் பல்வேறு அர்த்தமிக்க நூல்களையும் எழுதியவர். அவரது தொழிற்சங்க அனுபவங்களை சொல்லும் "ஜிந்தாபாத், ஜிந்தாபாத்" நூல் எப்போதும் எனக்கு உணர்வூட்டும். எங்கள் வேலூர் கோட்டச்சங்க அனுபவங்களை அதன் வெள்ளி விழாவின் போது தொகுக்க எனக்கு வழிகாட்டியது அந்த நூல்தான்.

சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாத மிகச் சிறந்த மனிதர். எங்கள் சங்கத்தோடு நெருக்கமான உறவு கொண்டவர். எங்கள் கோட்டத்தின் மகளிர் மாநாடு, தொழிற்சங்க வகுப்பு ஆகியவற்றில் கலந்து கொண்டவர்.

தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


எங்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அளவில் நடைபெறும் வெண்மணி சங்கம நிகழ்வில் தோழர் தமிழ்ச்செல்வன். 



ஏலகிரியில் நடைபெற்ற எங்கள் கோட்டத்தின் தொழிற்சங்க பயிலரங்கில்  தோழர் தமிழ்ச்செல்வன்.  


பாலக்காட்டில் நடைபெற்ற தென் மண்டல பயிலரங்கில் வகுப்பெடுத்த தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குகையில்.


மதுரையில் நடைபெற்ற தமிழ் மாநில மகளிர் கலை விழாவில் தோழர் தமிழ்ச்செல்வன். 

No comments:

Post a Comment