திருப்பரங்குன்றம் தீர்ப்பாளரை நீதிபதி பதவியிலிருந்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அளித்துள்ள முன்மொழிவு மிக மிக நியாயம் என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்.
ஆன்மீக குருக்களை கடவுளின் அம்சமாக பார்ப்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள், மூடர்கள், அயோக்கியர்கள், காட்டுமிராண்டிகள் என்று அவர் சொல்லியுள்ளார்.
பிரேமானந்தா, நித்தியானந்தா, ஆச்சாராம் பாபு, ராம்ரஹீம் சிங், சீசீ.ரவிசங்கர் உள்ளிட்ட ஏராளமான போலிகளை ஆன்மீகக் குருக்களாகவும் கடவுளின் அம்சமமாக கருதினால்தான் புத்திசாலி, உத்தமன், நாகரீக மனிதன் என்று இவர் சொல்வாரானால் அதை விட மூடராகவோ காட்டுமிராண்டியாகவோ, அயோக்கியனாக இருப்பதே மேல்.
தமிழ்நாட்டு மக்களை வெறுப்பேற்றி இவர் மீது மோசமாக பேச வைத்து அனுதாபம் தேட நினைக்கிறார். கலவரத்தை தூண்டும் எண்ணம் கூட இருக்கலாம்.
உச்ச நீதிமன்றம் இவர் மீது தன்னியல்பாக (SOU MOTU) நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று இல்லை என்பதால்தான் இவருக்கு தைரியம்.
பிகு: கடவுளின் அம்சமான ஆன்மீகக் குருக்கள் பற்றி கூடுதலாக அறிய, அவர்களின் நிழல் உலகம் பற்றி அறிய இந்த இணைப்பிற்குச் செல்லுங்கள் . .


No comments:
Post a Comment