Monday, February 23, 2026

தொழிற்சங்கமாய் ஒன்றிணைவோம் - மோடியிடம் லூலா

 


இன்று காலையில் ஆங்கில இந்து நாளிதழின் முதல் பக்க தலைப்புச் செய்தியை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. கொஞ்சம் சிரிப்பும் வந்தது.

ஏன்?

முதலில் அந்த செய்தியை பாருங்கள்.


தொழிற்சங்கவாதியும் பிரேசில் தொழிலாளர்கள் கட்சியின் தலைவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிகளை முறியடித்து ட்ரம்ப், மோடி போன்ற கிறுக்கு பிடித்த தலைவர்களின் வரிசையில் வரும் போல்சனரோவை தோற்கடித்து இப்போது பிரேசிலின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் லூலா பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மோடியை பக்கத்தில் வைத்துக் கொண்டு என்ன சொன்னார்?

டொனால்ட் ட்ரம்பின் அராஜக வரி விதிப்பால் பாதிக்கப்படும் நாடுகள், தனியாக அவரோடு பேசுவதற்குப் பதிலாக ஒரு தொழிற்சங்கம் போல ஒன்றிணைந்து பேசினால் நிச்சயம் பலன் கிடைக்கும். ஒரு தொழிற்சங்கவாதியாக என் அனுபவமும் இதுதான். ஒரு தனி தொழிலாளி, ஒரு கம்பெனி நிர்வாகத்தின் கொள்கைக்கு எதிராக பேசினால் எந்த பயனும் கிடைக்காது. அதுவே தொழிற்சங்கமாக ஒன்றிணைந்து போராடும் போது அந்த கூட்டு சக்தியால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

இதுதான் லூலா சொன்னது. 

அப்போது மோடியின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும்?

என் அனுமானங்கள் இரண்டு.

முதல் அனுமானம் மேலே உள்ள படத்தில் உள்ளது.

இரண்டாவது குரங்குக் குளியல் கீழே உள்ளது. 

"நானே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ட்ரம்பை குஷிப்படுத்த எனென்னம்மோ செஞ்சிக்கிட்டு இருக்கேன். இதிலே இந்த ஆளு பேசினது ட்ரம்புக்கு தெரிஞ்சா அதுக்கு என்ன திட்டுவாரோ?"


No comments:

Post a Comment