மூத்த பொதுவுடமை இயக்கத்தலைவர்,
சுதந்திரப் போராட்ட வீரர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராய் செயல்பட்டவர்,
சிறை வாழ்வையும் தலைமறைவு வாழ்வையும் மகிழ்வாய் அனுபவித்தவர்.
இறுதி மூச்சு வரை போராளியாய் திகழ்ந்தவர், எளிமையாய் வாழ்ந்தவர்,
நூற்றாண்டு கண்ட தகைசால் தமிழர்
தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்கு
நெஞ்சார்ந்த அஞ்சலி, செவ்வணக்கம் தோழர்.
அவரை ஒரே ஒரு முறைதான் பார்த்துள்ளேன். கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய செயற்குழுக் கூட்டத்திற்கு செல்ல புகைவண்டியை பிடிக்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த போது அங்கே வந்த அப்போதைய திருநெல்வேலி கோட்டப் பொதுச்செயலாளர் தோழர் டி.தேவபிரகாஷ், எனக்கு முன் இருந்த நாற்காலியைக் காண்பித்து யார் உட்கார்ந்திருக்கிறார் என்று பார்த்தாயா என்று கேட்டார்.
அங்கே அமர்ந்திருந்தது தோழர் ஆர்.நல்லக்கண்ணு.
தோழர் தேவபிரகாஷ் அவரோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார். என்னையும் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் மாநிலச் செயலாளர். ஆனால் தனியாகத்தான் இருந்தார். எந்த ஆரவாரமும் இல்லை.
அவர்தான் தோழர் நல்லக்கண்ணு.

No comments:
Post a Comment