மோடியை ஒப்பிடுகையில் அண்டப்புளுகன், ஆகாயப்புளுகன் என்ற வார்த்தையெல்லாம் ஜுஜுபி.
கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல் அவருடைய லேட்டஸ்ட் பொய் ஒன்றை பாருங்கள்
நான் கூட யாரோ மோடியை கலாய்க்க போட்டோஷாப் செய்தார்களோ என்று முதலில் யோசித்தேன்.
அந்த படத்தின் மேலே உள்ள கலாம் சென்டர் என்பதை வைத்து கொஞ்சம் இணையத்தில் தேடினேன்.
அது லக்னோவில் உள்ள ஒரு சங்கி என்.ஜி.ஓ. அங்கேதான் மோடி தான் பள்ளியில் படிக்கும் போதே ஒரு ரோபோவை உருவாக்கியதாகவும் அதற்காக பள்ளியில் அவருக்கு மெடல் கொடுத்ததாகவும் சொல்லி உள்ளார். அந்த கம்பி கட்டும் கதையை எப்படி விவரித்துள்ளார்கள் என்று பாருங்கள்.
நரேந்திர மோடி 1950 ல் பிறந்ததாக இப்போது சொல்கிறார்கள். ஒரு வேளை அவர் பனிரெண்டாவது படித்திருந்தால், பள்ளியில் படித்திருந்தால், 1968 ல் பனிரெண்டாவது படித்திருப்பார்.
இந்தியாவின் முதல் ரோபோ 1982 ல் உருவாக்கப்பட்டது என்றுதான் இணையம் சொல்கிறது. ஆனால் மோடி 14 வருடங்கள் முன்பாகவே ஒரு ரோபோவை தயார் செய்தார் என்று கூறினால், சிரிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
மழை பெய்யும் போது போர் விமானங்கள் போனால் ரேடாரில் தெரியாது என்று விமானப்படைக்கு ஆலோசனை சொன்ன விஞ்ஞானி அல்லவா அவர்!
பிகு: இது தொடர்பாக இன்னொரு பதிவும் எழுதுவேன்.



No comments:
Post a Comment