Thursday, February 5, 2026

ஓடி ஓளிவதைத் தவிர மோடிக்கு வேறு வழியில்லை . . .

 


குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி சொல்லும் தீர்மானம் பிரதமர் பதில் அளிக்காமலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது.

என்ன காரணம்?

சீனப் படைகள் முன் வந்த போது முடிவெடுக்க திராணியில்லாமல் நடுங்கியதை சொல்லும் ராணுவத் தளபதியின் புத்தகத்தைக் கொடுக்க ராகுல் காந்தி காத்திருக்கிறார்.

எங்கய்யா போச்சு உன் 56 இஞ்ச் மார்பு என்று எதிர்க்கட்சிகள் குடைவார்கள்.

டொனால்ட் ட்ரம்பின் நிபந்தனைகளுக்கு அடி பணிந்து அவர் அடிமையாய் மாறி விட்டாயே என்ற கேள்விகள் வேறு.

இதைத் தவிர மோடிதான் முஜ்ரா நடனம்  (விபரங்களுக்கு  இந்த இணைப்பை பார்க்கவும்)   ஆடினார் என்று எப்ஸ்டீன் கோப்புகள் சொல்வதாக வேறு ஒரு தகவல்.

இப்படிப்பட்ட சூழலில் அவர் எப்போதுமே வெறுக்கும் நாடாளுமன்றத்திற்கு மோடி எப்படி வருவார்? 

ஓடி ஓளிவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.


அதற்கு ஓம் பிர்லா (சபாநாயகர் என்றெல்லாம் அந்த சங்கிக்கு மரியாதை அவசியமில்லை) சொல்லியுள்ள காரணம்.

வழக்கமான பாஜக அயோக்கியத்தனம்.

நாடாளுமன்றம் கூட பாதுகாப்பில்லை என்றால் உள்துறை அமைச்சர் பதவி எதற்கு? அமித் ஷா ராஜினாமா செய்யட்டும். 

பிகு : நான் பனையூரிலேயே பதுங்கி இருப்பதைப் பற்றி பாஜகவினர் யாரும் பேச முடியாது என்று விஜய்க்கு மகிழ்ச்சியாக இருக்கும். 

No comments:

Post a Comment