Tuesday, February 10, 2026

மூவரைப் பெற்றால் சர்சங்சாலக் சோறு போடுவாரா?

 


இந்தியாவின் மிகப் பெரிய தீவிரவாத, அடிப்படைவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சர்சங்சாலக் மோகன் பகவத் உதிர்த்த முத்து கீழே உள்ளது.


அவர் சொல்லும் முதல் விஷயம் விஷம். வழக்கமான விஷம். மத வெறியை தூண்டுவதை மட்டுமே நூறாண்டுகளாக செய்து கொண்டிருக்கும் கேவலமான அமைப்பு இது.

கடந்த பல பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் சிறுபான்மையினரின் சதவிகிதம் அதிகரிக்கவே இல்லை என்பதுதான். அது மட்டுமல்ல, கடைசி இரண்டு மக்கட்தொகை கணக்கெடுப்புக்கள் இஸ்லாமியர்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் இந்துக்களை விட குறைவாகவே இருந்திருக்கிறது. 

2021 ல் எடுக்கப்பட வேண்டிய மக்கட்தொகை கணக்கெடுப்பை இதுவரை துவக்காமல் இருப்பது கூட ஆர்.எஸ்.எஸ் அளந்து கொண்டிருக்கும் கட்டுக்கதை அவர்கள் ஆட்சியிலேயே அம்பலமாகி விடும் என்பதுதான்.

நிற்க

மூன்று பேரை பெற்றெடுக்க வேண்டும் என்று சொல்கிற மோகன் பகவத் திருமணமாகாதவர். அவருக்கு குடும்பத்தை நடத்துவதில் உள்ள சிரமங்கள் தெரியாது. வெங்காயம் சாப்பிடாதாதால் எனக்கு வெங்காய விலை உயர்வு பற்றி தெரியாது என்று சொன்ன நிர்மலா அம்மையார் கேடகிரிதான் இவர்.

இவருக்கு குழந்தைகளை வளர்ப்பதற்காக ஆகும் உணவுச் செலவு, கல்விச் செலவு, மருத்துவச் செலவு, திருமணச் செலவு ஆகியவற்றைப் பற்றி தெரியுமா?

வேலையின்மை பிரச்சினையைப் பற்றி தெரியுமா?

குடும்ப பாரம் சுமக்காத இவருக்கு குடும்பத்தை பெருக்கச் சொல்ல என்ன அருகதை இருக்கிறது?

மூன்று குழந்தைகளுக்கான செலவுகளை அரசு கொடுக்குமா? இது என்ன பழைய சோவியத் யூனியன் அரசா?

கார்ப்பரேட்டுகளிடம் லஞ்சம் வாங்கி கொழுத்துப் போயிருக்கும் பாஜக அளிக்குமா?

முடியாது அல்லவா?

SO SHUT UP MR MOHAN BHAGAWATH

No comments:

Post a Comment