Wednesday, January 25, 2023

துயரத்தில் லாபம் பார்க்கும் Sadistகள்

 


கூகிள் நிறுவனப் பங்குகளின் விலை அமோகமாக உயர்ந்துள்ளது. வெறித்தனமாக முதலீடு செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன.

அப்படி வெறித்தனமாக முதலீடு செய்யக்கூடிய விதத்தில் கூகிள் அப்படி என்ன புதிதாக சாதித்துள்ளது?

12000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

அந்த முடிவை முதலீட்டாளர்கள் வரவேற்கின்றனர்.

லாபத்தை அதிகரிக்க ஊழியர்களை குறை, முடியவில்லையென்றால் அவர்கள் ஊதியத்தை குறை என்பது ஒரு உலகமயக் கோட்பாடு.

அது இங்கே அமலாகியுள்ளதால் முதலீட்டாளர்களுக்கு குஷி. 

லாபம், லாபம், அதிக லாபம் - இதுவே தாரக மந்திரம்.

அடுத்தவர் துயரத்தில் பணி இழந்தவர்களின் சோகத்தில் குதூகலிக்கும் இவர்களை Sadist என்றழைப்பது பொருத்தமானதுதான். 


பிகு: காலையில் எழுதி வைத்திருந்த பதிவு இது. அதானி வகையறாக்கள் நிறுவனப் பங்குகளின் விலை வீழ்ச்சி அடையும் என்பது அப்போது தெரியாது. அதானி செய்த மோசடிகள் அம்பலமானதால் ஏற்பட்ட சரிவாக தோன்றுகிறது. அதற்காக அவர் கவலைப்பட மாட்டார். அதானிக்கு உதவிக்கரம் நீட்டத்தான் அவரது தரகர் மோடி இருக்கிறாரே!

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete