Friday, December 19, 2014

காவிக் கூட்டத்தின் அடுத்த திட்டம் என்ன?

 





















ஆறு மாத காலமாக அராஜகம் செய்து கொண்டு வருகின்ற காவிக் கூட்டம் கொஞ்ச நஞ்ச மனசாட்சி கூட இல்லாமல் கொலைகாரன் நாதுராம் கோட்சேவிற்கு  நாடு முழுதும் சிலை வைக்க வேண்டும் என்று பேசியுள்ளது. 

மோடி என்கிற வெறி பிடித்த மனிதர் பிரதமராக இருக்கிறதால் இதுவும் சொல்வார்கள். இன்னமும் சொல்வார்கள். 

அவர் நாடாளுமன்றம் வர மாட்டார். அப்படியே வந்தாலும் காவிக்கூட்ட அராஜகம் பற்றி எதுவும் பேச மாட்டேன் என்று மவுன சாமியாராக அங்கே உட்கார்ந்து கொண்டு இருப்பார். 

இன்று கோட்சேவிற்கு சிலை வைக்க வேண்டும் என்று சொல்கிற கூட்டம் நாளை மகாத்மா காந்திதான் கோட்சேவை கொன்றார் என்று கூட வரலாற்றை மாற்றி எழுதுவார்கள்.

இதோடு நிறுத்திக் கொள்வார்களா?

மாட்டார்கள், இருக்கிற நாலரை வருடத்தில் இந்தியா எதிர்பார்க்காத ஏழரைகள் வந்து கொண்டே இருக்கும்.

அவர்களைச் சொல்லி குற்றமில்லை.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தில் "குறும்படம் இயக்கும் குரங்குகளே" என்று தம்பி ராமையா சொல்வது போல

"மோடிக்கு வாக்களித்த மூடர்களே" என்று வாக்களித்த மக்களைத்தான் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment