Tuesday, December 2, 2014

படுபாவிகளே, நக்கலை நிஜமாக்கிட்டீங்களே

 












பாஜக எம்.பி தருண் விஜய் திருக்குறள் ஒரு ஹிந்து மொழியில் எழுதப்பட்ட  ஹிந்து நூல் என்று அபத்தமாக உளறியதைக் நையாண்டி செய்து 

"குரான், பைபிள் என எல்லா நூல்களுமே ஹிந்து நூல்கள் என்று சொல்லி விடுங்கள். இந்த உலகமே ஹிந்து உலகம் என்றும் சொல்லி விட்டால் அதன் பின்பு இந்த உலகம் முழுதுமே உங்கள் ராஜ்யம்தான்" 

என்று  நேற்று  எழுதியிருந்தேன்.

நேற்று அதை ஒரு மோடியின் மந்திரி  நிரஞ்சன் ஜோதி சாத்வி என்ற பெண் சாமியார் பேசி விட்டார் என ஒரு நண்பர் பின்னூட்டத்தில் சுட்டிக் காட்டியிருந்தார். துபாய் திரு சேஷனுக்கு நன்றி.  முஸ்லீம், கிறிஸ்துவர்கள் என எல்லோரும் ராமரின் பிள்ளைகளாம். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எல்லாம் இந்தியாவை விட்டு வெளியேறி விட வேண்டுமாம். 

நக்கலுக்கு சொல்றதையெல்லாம் நிஜமாக்கினீங்கனா, இந்தியாவோட நிலைமை என்ன ஆகறது?

பரமார்த்த குருவும்  சீடர்களும் போலத்தான் மோடியும் அவரது அமைச்சர்களும் இருக்கிறார்கள்.

அது என்ன, ஆனா ஊனா இந்தியாவை விட்டு வெளியே போகச் சொல்றீங்க?  அது என்ன உங்க பாட்டன் சொத்தா?

உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களைச் சொல்லனும். 

அவங்களும் பரமார்த்த குருவின் சீடர்கள்தான். 




1 comment: