Monday, December 1, 2014

காவிக்கூட்டத்திற்கு ஒரு சூப்பர் ஐடியா

 http://chennaionline.com/images/gallery/2014/November/20141111095513/Vairamuthu_Felicitating_Tarun_Vijay_Event_Stills004.jpg

வைரமுத்துவால் விழாவெடுத்து கொண்டாடப்பட்ட தருண் விஜய் என்ற காவிக்கூட்ட பிரதிநிதி ஏன் தமிழையும் திருக்குறளையும் உயர்த்திப் பிடித்தார் என்பதை திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார்.

"திருக்குறள் ஹிந்து மொழியில் எழுதப்பட்ட ஒரு ஹிந்து நூல்"

நல்ல வேளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்து விட்டார். இல்லையென்றால் அவர் இப்போது தற்கொலை செய்து கொண்டிருப்பார்.

இப்படி ஒவ்வொரு மொழிக்கும்  ஒவ்வொரு நூலுக்கும் தனித்தனியே ஹிந்து அடையாளம் கொடுப்பதற்குப் பதிலாக ஆங்கிலம், ப்ரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், உருது, அரபி, ஹீப்ரு, லத்தீன், கிரேக்கம், கன்னடம், மலையாளம், துளு, என்று எல்லா மொழிகளுமே ஹிந்து மொழிகள் என்று சொல்லி விடுங்கள்.

பிறகு குரான், பைபிள் என எல்லா நூல்களுமே ஹிந்து நூல்கள் என்று சொல்லி விடுங்கள். இந்த உலகமே ஹிந்து உலகம் என்றும் சொல்லி விட்டால் அதன் பின்பு இந்த உலகம் முழுதுமே உங்கள் ராஜ்யம்தான். 

சரி இந்த அறிவிப்பையெல்லாம் செய்த பின்பு அதற்காக அண்ணன் வைரமுத்து இன்னொரு விழா எடுப்பார். 

அதற்கும் எல்லோரும் அவசியம் வந்து விடுங்கள்.

சே! வெக்கம் கெட்டவர்கள்.

 

4 comments:

  1. Raman, kaavi will not change.

    ReplyDelete
  2. குரான், பைபிள் என எல்லா நூல்களுமே ஹிந்து நூல்கள் என்று சொல்லி விடுங்கள்....Central Minister already told yesterday....
    http://www.dinamalar.com/news_detail.asp?id=1128847

    Seshan/dubai

    ReplyDelete
  3. aravazhi andhanan thaal serndhar kallal piravaazhi neendhal aridhu , Thirukural hindu nool illamal verenna ?

    ReplyDelete
  4. திருக்குறல் இந்து நூலென்றால் பரமசிவன், பார்வதி, முருகன், விஷ்ணு, சரஸ்வதி, பிரம்மா, ராமன், கிருஷ்ணன், எல்லோரும் எங்கே? திருவள்ளுவர் சமணர் என்ற வாதம் இருப்பது தெரியாதா அனானி? திருக்குறள் இந்து நூல் பின் எதற்காக கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என்று காவிக்கூட்டம் கேட்கிறது அனானி?

    ReplyDelete