Thursday, December 18, 2014

வேதாளத்தை சுமக்கும் மோடி

 http://www.webmallindia.com/img/film/english/vikram___betal_1323350883.jpg

"தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் வேதாளத்தை  தன் தோளில் சுமந்து கொண்டு"

அம்புலி மாமாவில் இந்த வரிகளை படித்தது நினைவுக்கு வருகிறதா?

அது போலவே திங்கட்கிழமை முதல் மாநிலங்களவையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான பட்டியலில் அன்றாடம் இடம் பெருகிற ஒரு விஷயம் என்ன தெரியுமா?

இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்துவதற்கான இன்சூரன்ஸ் சட்ட (திருத்த) மசோதாவை நிறைவேற்றுவது என்பதுதான்.

ஒவ்வொரு நாளும் மாநிலங்களவை முடங்கிப் போனாலும் அடுத்த நாளுக்கான பட்டியலில் மறக்காமல் போட்டு விடுகிறார்கள்.

இந்தியாவிற்கு வரவுள்ள பாரக் ஒபாமாவிற்கான பரிசு அல்லவா இது!

இருந்தும் கூட நாடாளுமன்றம் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டேன் என்று கொள்கைப் பிடிப்போடு இருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி.

அப்ப்டியே வீட்டிலேயே இருந்துடுங்க சார். இந்த கூட்டத்தொடர் அப்படியே போய் விடட்டும்.

 

No comments:

Post a Comment