Tuesday, October 14, 2014

ஏமாற்றமாய் நொடியில் மாறிய அதிமுக கொண்டாட்டம்


போன வாரமே  எழுதிய கவிதை. ஆனால் வலைப்பக்கத்தில் 
பதிவிட எப்படியோ தவறி விட்டது. 
 


வெடித்துச் சிதறிய பட்டாசுகளின்
புகை மண்டலம் மறைந்து
கந்தக நெடி காற்றினிலே
கலக்கும் முன்னே,


 
வாயில் போட்ட இனிப்பு
வயிற்றைச் சென்றடைந்து
சுவை கூட நாவினை விட்டு
அகலும் முன்னே,

முகத்தில் மலர்ந்த புன்சிரிப்பும்
உள்ளத்தில் உதித்த மகிழ்ச்சியும்
பீறிட்டுக் கிளம்பிய கொண்டாட்டமும்

பொய்க்கனவாய் கலைந்து
கண்ணீரில் தத்தளிப்போர்
சோகத்தை வர்ணிக்க
வார்த்தைகளேது என்னிடத்தில்?

தவறிழைக்காமல் இருந்திருந்தால்
தீர்ப்பேது? தண்டனையேது?
பிணை பெறும் தேவைதான் ஏது?

மாயையில் மூழ்கிய நெஞ்சங்களுக்கு
உண்மையை உணரும் மூளைதான் ஏது?

No comments:

Post a Comment