Monday, June 30, 2014

தொண்டர் மீது உப்பு மூட்டையாய் அமர்ந்த எம்.பி




மேலே உள்ள படத்தைப் பார்த்தீர்களா? இந்த மகானுபாவன் அஸ்ஸாம் மாநிலத்தின் கரிம்கஞ்ச் தொகுதியின் மக்களவை உறுப்பினரான மாண்புமிகு ராதே ஷ்யாம் பிஸ்வாஸ். அஸ்ஸாம் ஜனநாயக ஐக்கியக் கூட்டணி என்ற கட்சியினைச் சேர்ந்தவர்.

தொகுதிக்குள் செல்கையில் சேறு படிந்த ஒரு இடத்தை கடக்கையில் அவரது கால் அழுக்காகி விடக் கூடாது என்று ஒரு தொண்டரின் முதுகில் உப்பு மூட்டை ஏறிச் செல்கிறார்.

தனது கால் அழுக்காகக் கூடாது என்று நினைக்கிற இந்த திருவாளர் பரிசுத்தம் தனது பதவிக்காலம் முடிவதற்குள் தனது தொகுதிக்குள் இருக்கிற சேறு படிந்த சாலைகளையெல்லாம் சரி செய்து விடுகிறாரா பார்ப்போம்.

பாவம் இவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த அந்த தொகுதியின் அப்பாவி மக்கள்.

1 comment:

  1. ஓட்டு கேட்கும்போதாவது இவ்வழியில் நடந்துதான் வந்திருப்பாரா?

    ReplyDelete