Monday, June 2, 2014

ராஜாதி ராஜன் இந்த ராஜா



 



கிராமத்திலிருந்து தென்றலாய் புறப்பட்டு
இசையுலகின் புயலாய் மாறியவன்.

மச்சானைத் தேடிய அன்னக்கிளி
மாபெரும் கலைஞனை கண்டுபிடித்தாள்.

பாடப்புத்தகத்தை படித்ததை விட
இவன் பாடல் கேட்ட நாள் அதிகம்.

எல்லா உணர்வையும் ஊட்டி 
வளர்த்த இசைத்தாயும் அவன்.


அவன் இசையால் நாங்கள் மகிழ்ந்தோம்.
ஆனால் பலர் வாழ்ந்தார்கள்.

எல்லைகள் கடந்தவன்,
இசையில் எல்லைகளே இல்லாதவன்.

குழலினிது, யாழினிது, 
உன் இசையில் 
எல்லா வாத்தியங்களுமே
இனிது இனிது என்றும் இனிது.
உந்தன் பாடல்கள் என்றும் இனிது.

தமிழகத்தின் இசை அடையாளம்
என்றுமே நீதான் ராஜா.



No comments:

Post a Comment