Friday, June 6, 2014

அடித்துக் கொண்டால் கோவிலின் புனிதம் போகாதா?

இன்று அமிர்தசரஸ் பொற்கோயிலில் இரு பிரிவினருக்கு இடையே
நடந்த மோதல்களின் போது எடுத்த புகைப்படங்களை யாஹூ 
இணையதளம் வெளியிட்டிருந்தது. அவை கீழே




















முப்பது ஆண்டுகள் முன்பாக இதே நாளில் இந்திய ராணுவம் 
பொற்கோயிலில் நுழைந்ததால் அதன் புனிதம் கெட்டுவிட்டது
என்பதற்காக கண்டன தினம் அனுசரித்தீர்கள். அதிலேதான்
இந்த அடிதடி.

அன்று ராணுவம் ஏன் உள்ளே நுழைந்தது என்பதற்கான காரணம்
எல்லோருக்கும் தெரியும். அகாலி தளக் கட்சியை ஓரம் கட்ட
பிந்தரன் வாலேயை ஊக்குவித்த இந்திரா காந்திக்கு பின்பு அவரே
எதிரியாக மாறிப்போனதும் பொற்கோயில் ஆயுதக்கிடங்காக
மாறியதும் ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டாரில் பிந்தரன் வாலே 
கொல்லப்பட எதிர்வினையாக இந்திராவின் உயிர் பறிக்கப்பட்டதும்
அனைவரும் அறிந்த ஒன்று.

இராணுவம் நுழைந்ததால் கெட்டுப் போன பொற்கோயிலின்
புனிதம் இன்றைய அடிதடியால் மீட்கப்பட்டு விட்டதா?

இன்று மீண்டும் பொற்கோயில் களங்கப்பட்டதாகவே நான்
உணர்கிறேன்.

கோயில் கொடியவர்களின் கூடாரமாகி விட்டது என்ற 
கலைஞரின் வசனம் இன்றைக்கும் பொருத்தமாக இருப்பது
ஒரு சோகம்.
 

No comments:

Post a Comment