நவம்பர் 2024 ல் உத்திர பிரதேசத்தில் சம்பல் என்ற இடத்தில் ஒரு கலவரமும் துப்பாக்கி சூடும் நடந்தது.
ஐநூறு ஆண்டு பழமையான ஒரு மசூதி, கோயிலை இடித்து கட்டப்பட்டதாக சங்கிகள் சர்ச்சை எழுப்ப, ஆதித்ய சிங் மாவட்ட நீதிபதி அந்த மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
அந்த ஆய்வு செய்ய மசூதி நிர்வாகத்தினர் எதிர்த்த போது, சங்கிகள் கலவரம் செய்தனர். போலீஸ் மசூதியை பாதுகாக்க நின்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மூன்று இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர். ஏராளமானவர்கள் காயப்பட்டனர்.
துப்பாக்கிச்சூட்டில் இறந்த ஒருவரின் தந்தை தொடுத்த வழக்கின் அடிப்படையில் மாவட்ட நீதிபதி, போலீஸாரின் வெறித்தனமான தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய அனுஜ் சவுத்ரி என்ற ஏசிபி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யச் சொல்லி மாவட்ட நீதிபதி சுதீர் என்பவர் உத்தரவிடுகிறார்.
காவல்துறை அதை ஏற்க முடியாது என்ற நிலை எடுக்கிறது. திருப்பரங்குன்றம் தீர்ப்பாளருக்காக ஒப்பாரி வைத்த சங்கிகள் இந்த விஷயத்தில் என்ன செய்தார்கள் தெரியுமா?
நீதிபதி சுதீரை இட மாற்றம் செய்து விட்டார்கள்.
நீதிபதி லோயாவிற்கு நிகழ்ந்தது இவருக்கு நடக்காதது மகிழ்ச்சியே.
மாட்டுக்குண்டர்களால் கொல்லப்பட்ட முகமது அக்லக் வழக்கில் உண்மையை பதிவு செய்த இன்ஸ்பெக்டர் போல கொல்லப்படாமல் மாறுதலோடு நிறுத்திக் கொண்டது மொட்டைச்சாமியார் ஆட்சி.
இன்னொரு செய்தி தெரியுமா?
சுதீர் இடத்திற்கு வந்தது யார் தெரியுமா?
மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்ட அதே ஆதித்ய சிங் தான் . . .

No comments:
Post a Comment