புவனேஸ்வரிலிருந்து இன்று அதிகாலைதான் வீடு திரும்பினேன். இன்று பராமரிப்பிற்கான மின் தடை வேறு. மோட்டார் ஓடாத பிரச்சினை வேறு. அதனால் சமூக வலைப்பங்கள் பக்கம் ரொம்பவே தாமதமாகத்தான் வந்தேன்/
வலைப்பதிவு எழுத வேண்டிய முக்கியமான மூன்று CONTENT கள் கிடைத்தது.
திமுகவில் உள்ள சங்கி என்று சந்தேகப்பட வைத்துள்ள சேகர் பாபு பயன்படுத்திய அடாவடி வார்த்தை.
தமிழ்நாடு அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் முன்னேற்றம்.
வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்.
இதில் கடைசியை முதலில் எழுதுகிறேன்.
ஹூயூகோ சாவேஸ் காலத்திலிருந்தே அமெரிக்க ஏகாதிபத்தியமும் பன்னாட்டு மூலதனமும் வெறியோடு குறி வைத்துள்ள நாடு வெனிசுலா. சாவேஸிற்கு பிறகு ஆட்சிக்கு வந்த நிக்கோலஸ் மதுரோவை அகற்ற அனைவரும் காலம் காலமாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்கான சதிச்செயலில் ஈடுபட்டு வரும் கொரோனா அம்மையாருக்கு அமைதிக்கான நோபல் பரிசை அழிவுக்கான நோபல் பரிசாக அளித்தார்கள். ட்ரம்பிற்கு அதில் வருத்தம் வேறு.
ரஷ்யா-உக்ரைன் போரைத்தவிர மற்ற அனைத்து போர்களையும் நிறுத்தி விட்டேன் என்று கதையளந்து (அது கதை என்று மறுக்கும் துப்பு கூட இல்லாத கோழை மோடி என்பது வேறு) கொண்டிருக்கும் ட்ரம்ப் இன்று தன் நாட்டுப் படைகள் மூலம் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி மதுரோவை கைது செய்து விட்டோம் என்று கொக்கரித்துள்ளார்.
அநேகமாக கணபதி அய்யர் பேக்கரி டீலிங் போல கொரோனா அம்மையாரிடம் நாட்டை கொடுத்து விட்டு அழிவிற்கான நோபல் பரிசை ட்ரம்ப் பெற்றுக் கொள்வார்.
அவர்களுக்கு ஒரு வரலாற்றை மட்டும் நினைவு படுத்த வேண்டும்.
இப்படித்தான் 2002 ம் ஆண்டு குட்டி ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த போது கலகம் நடத்தி சாவேஸை பதவியிலிருந்து அகற்றி கைது செய்தார்கள். மக்கள் கிளர்ந்தெழுந்து வீதிக்கு வந்து புரட்சி செய்து மூன்றே நாட்களில் அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினர்.
வரலாறு மீண்டும் திரும்பும். . .

No comments:
Post a Comment