Friday, April 26, 2024

மோடின்னா பயமா EC???

 


தேர்தல் பிரச்சாரத்தின் போது அநாகரீகமாக, ஆபாசமாக, வெறுப்புப் பேச்சு யாராவது பேசினால் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நேரடியாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கும்.

மோடி தொடர்ந்து செய்து வரும் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கண்டித்து நடவடிக்கை எடுக்குமாறு பலரும் கடிதம் அனுப்பி அழுத்தம் கொடுத்த பின்னர் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆனால் மோடிக்கு அல்ல.

பாஜக தலைவர் பதவியில் உட்கார்ந்திருக்கும் பொம்மை நட்டாவிற்கு.

அதிலும் கூட மோடியின் பெயர் இல்லை. உங்கள் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் என்றுதான் சொல்கிறது கடிதம்.

கட்சித்தலைவருக்கு கடிதம் அனுப்பியது மோடிக்காக மட்டும் இல்லை என்று காண்பிக்க "மோடி பொய் பேசுகிறார்" என்று ராகுல் காந்தி சொன்னதற்கு மல்லிகார்ஜூன் கார்கேவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் நட்சத்திரப் பேச்சாளர் என்ற மறைப்பு எல்லாம் இல்லை. நேரடியாக ராகுல் காந்தி என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

ஏன்யா தேர்தல் ஆணையர்களா, மோடி என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? அந்தாளு பெயரை சொல்றதுக்கு இப்படி பயப்படறீங்க?

மோடி பொறுக்கி எடுத்து பதவி கொடுத்த விசுவாசமா? எலும்புத்துண்டு போட்டவனுக்கு விசுவாசமா ஏதோ ஒன்னு வாலை ஆட்டுமே, அது மாதிரி . . 

No comments:

Post a Comment