Wednesday, January 23, 2019

டீ விற்காத மோடி – பழைய செய்தி




“மோடி டீ விற்றதாக சொன்ன செய்தி பொய்யானது. மக்களிடம் அனுதாபம் பெற வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட நாடகம்” என்று மோடியின் நாற்பதாண்டு கால நண்பரும், மோடி என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று சில மாதங்கள் முன்பாக புகார் கொடுத்தவருமான பிரவீண் தொகாடியா கூறியுள்ளது பரபரப்பாக பரவிக் கொண்டிருக்கிறது.



இச்செய்தி ஒன்றும் புதிதல்ல.

பதினைந்து லட்ச ரூபாய் கோட் அணிந்து கொண்டு ஒபாமாவுக்கு டீ போட்டு கொடுத்ததாக மோடி சீன் போட்ட காலத்திலேயே “ மோடி டீ விற்ற மோசடிக் கதை”யை  ஒரு பத்திரிக்கையாளர் அம்பலப்படுத்தியது நினைவுக்கு வந்தது.

மோடி டீ விற்றதாக சொன்ன காலக்கட்டத்தில் மோடி விற்றதாக சொல்லப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்படவே இல்லை என்பதை அந்த பத்திரிக்கையாளர் அம்பலப்படுத்தி இருந்தார்.

இல்லாத ஸ்டேஷனில் விற்காத டீ யை யார் வாங்கிக் குடித்தார்களோ!!!!!

பத்திரிக்கையாளர் சொன்னதை நம்பாத அப்பாவி மக்கள் இப்போது மோடியின் நாற்பதாண்டு கால நண்பர் சொல்வதையாவது நம்பினால் சரி

No comments:

Post a Comment