Saturday, May 6, 2017

ஆயுதமாய், அச்சுறுத்தலாய்




நீ பிறந்து
இரு நூறு ஆண்டுகளானது.
நீ இறந்தும் 
நூறாண்டுகளுக்கும் மேலானது.

வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே 
உலக மக்கள் வாழ்வதற்கு
வழி காட்டிப் போனாய்.

எல்லாம் விதியென்று நொந்தவரை
பிரச்சினையின் ஆணிவேர் எது
என அடையாளம் காட்டிய
 உன் சிந்தனை மட்டும்
ஆயிரமாயிரம்  ஆண்டுகள்
நீடித்து   நிலைக்கும்

உழைப்பாளி மக்களுக்கு ஆயுதமாய்
சுரண்டிக் கொழுப்பவருக்கு அச்சுறுத்தலாய். 

பிகு: ஒரு பயணத்தின் காரணமாக ஒரு நாள் தாமதமாக. 

No comments:

Post a Comment