Saturday, May 6, 2017

அங்கே உள்ளவனுக்கே . ..... தெரியலை!!!!





கேள்வி: எந்த ஊர் சார் உங்களுக்கு?

பதில்: சென்னை

கேள்வி: உங்க தாய் மொழி என்ன?

பதில்: தமிழ்

கேள்வி: தமிழ் எழுதப் படிக்க தெரியுமா?

பதில்: நான் பள்ளிக்கூடமெல்லாம் போகாம ஊர் சுத்திக்கிட்டு இருந்தேன். அதனால தமிழ் பேசுவேன். கொஞ்சம் கொஞ்சம் படிப்பேன். தட்டுத்தடுமாறி எழுதுவேன்..

கேள்வி: உங்க கல்யாணம் ஏன் நின்னு போச்சு?

பதில்: தாய்மொழியில ஒழுங்கா படிக்கவும் தெரியலை, எழுதவும் வரலை. படிப்பறிவில்லாத உனக்கு எதுக்கு கல்யாணம்னு நிறுத்திட்டாங்க.

கேள்வி: தமிழ் தெரியாத காரணத்தால் கல்யாணம் நின்னு போச்சுன்னு பத்திரிக்கையில் போட்டுருக்காங்களே!

பதில்: எவன் திரிச்சு போட்டானோ, அவனைப் போய் கேளுய்யா.

அப்போ “தி இந்து” வைத்தான் கேட்கனும். உ.பி யில் உள்ளவனுக்கு இந்திதான் தாய் மொழி. அதுவே அவனுக்கு தகறாருன்னு அந்த பொண்ணு கல்யாணத்தை நிறுத்திடுச்சு. மணமகனுக்கு படிப்பறிவு இல்லாததால் திருமணம் ரத்து என்று தலைப்பு போடாம “இந்தி தெரியாததால் திருமணம் நின்றதுன்னு ஏய்யா திரிச்சு போடற?

முன்னாடி இந்தி தெரியலைனா வேலை கிடைக்காதுன்னு சொன்னீங்க! இப்ப கல்யாணம் ஆவாதுன்னு மிரட்டறீங்களா? ஓவரா மோடிக்கு ஜால்ரா அடிக்காதீங்கய்யா! உ.பி மாநிலத்தில் உள்ளவனுக்கே இந்தி ஒழுங்கா தெரியலை. தமிழ்நாட்டுல திணிக்கறதுல காண்பிக்கிற வேகத்தை விட்டுட்டு முதல்ல அவனுக்கு இந்தியை கத்துகுடுங்க.

3 comments:

  1. inna thala ithuvellam oru newsa. We all know that UP is a most backward state and the peoples are mostly illiterate. Because of their inability to read and write their own mother tongue they could not able to learn english and because of that they force southindians to learn hindi. So we are all learning Hindi for the favour of themselves. There are some illegal brethren who support this.

    ReplyDelete
    Replies
    1. திருமணம் நின்றது செய்தி அல்ல. இதனை திரித்து எழுதிய " தி இந்து" வின் விஷமமே பதிவிற்கான காரணம்

      Delete