Monday, November 7, 2016

நாளை மீண்டும் . . .




நூறாண்டுகள் தொட்டாலும்
இன்றும் மெய் சிலிர்க்கவைக்கும்
உலகை உலுக்கிய
ரஷ்யப் புரட்சி

உழுபவனுக்கு நிலம்,
அனைவருக்கும் வேலை,
சுய மரியாதையோடு
வாழ்க்கை.

கனவில் அல்ல,
நிஜத்திலும் சாத்தியமாக்கிய
யுகப் புரட்சி
இன்றும் எழுச்சியின்
சின்னமாய்.

காலத்தின் வேகத்தில்
சிதைந்து போனது
நாடுகளாய் இருக்கலாம்,
கட்சிகளாய் இருக்கலாம்.

எல்லாம் முடிந்ததென்று
எதிரிகள் 
கை கொட்டியும் சிரிக்கலாம்.

நெஞ்சில் தேக்கிய கனல்
என்றென்றும் அணையாது.

இலக்கு நோக்கிய
இலட்சியம் என்றும் சாகாது.

தவறுகளை திருத்திக் கொண்டு
தடைகளை தகர்த்து விட்டு
தளைகளை அறுத்தபடி
போலிகளை களையெடுத்து

லெனின் ஏந்திய 
புரட்சி தீபத்தோடு

நம்பிக்கையை மனதிலேந்தி
நாளை மீண்டும் வருவோம்

No comments:

Post a Comment