Sunday, March 20, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பாராட்டி வைரமுத்து, வாலி கவிதைகள்

ஸ்பெக்ட்ரம்  ஊழலைப் பாராட்டி  கலைஞரின்  அரசவைப்
புலவர்கள்  வைரமுத்துவும் வாலியும் கவிதை  எழுதினால் 
எப்படி இருக்கும் என்று  அவர்கள் பாணியிலேயே  எழுதப்பட்ட
கவிதைகள்  இங்கே .
யாம் பெற்ற இன்பம் பெருக இந்த வையகமும் என்ற  எனது
பெருந்தன்மையும் பேரவாவுமே  இக்கவிதைகளை மறு வெளியீடு  செய்ய வைத்துள்ளது.
   
 கவிஞர் வைரமுத்துவின் கவிதை(கற்பனைதான்)
‍‍‍‍‍‍‍‍‍‍=============================================
"
அன்று சர்க்காரியா சொன்னார்.
நீ விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவன் என்று.
ஆனால் இன்று விஞ்ஞானத்திலேயே நீ ஊழல்செய்திருக்கிறாய்.
வானில் உள்ள தேவர்களின் எண்ணிக்கை கூட
  முப்பத்துமுக்கோடி தான்.
நீ ஒரே தவணையில் அடித்ததோ
  ஒரு லட்சத்துஎழுபத்தாறாயிரம் கோடி.
ஊழல் செய்வதில் நீ ஒரு எட்டமுடியாத சிகரம்.
ஊழலுக்கே உன் குடும்பம்தான் தலைநகரம்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் தலைவன் நீ..
உன் குடும்பம் வழி வந்தாரை வாழ வைக்கும் தலைவன் நீ
ஆம் குடும்பத் தலைவன் நீ..
நான் கட்டியதோ பொன்மணி மாளிகை….
நீ கட்டியதோ பத்மாவதிதயாளு மற்றும் ராசாத்தி
சர்காரியாவையே சாக்கு மூட்டையில் கட்டியவன் நீ….
உன்னிடம் சுண்டைக்காய் சிபிஐ எம்மாத்திரம்….."

கவிஞர் வாலியின் கவிதை(கற்பனைதான்)
===========================================
"
கொற்றவனே… கொற்றவனே….
ஸ்பெக்ட்ரத்தை விற்றவனே
தறுதலைகளை பெற்றவனே
சூடு சொரணை அற்றவனே
கொற்றவனே.. கொற்றவனே..
உன்னால் அடைய வேண்டியது ஏற்றம்.
தமிழகத்துக்கு கிடைத்ததோ ஏமாற்றம்.
மக்களுக்கு மிஞ்சியதோ முற்றம்.
உனக்கு அள்ளித் தந்தது ஸ்பெக்ட்ரம்.
தமிழ்ல உனக்கு புடிச்ச வார்தை கோடி
நீ பெத்து வச்சுருக்க புள்ளைங்களோ கேடி
தள்ளு வண்டில போனாலும் தளராது உன் பாடி..
உன் புள்ளைங்களுக்கு நீதான் சரியான டாடி
எக்கச்சக்கமா சேத்துருக்க துட்டு
நீ கதை வசனம் எழுதுனா சூப்பர் ஹிட்டு
உன்னால தமிழகம் போனது கெட்டு
உனக்கு மக்கள் அடிக்கப் போறாங்க ரிவிட்டு"


1 comment:

  1. வாய் விட்டு சிரித்தேன் தோழா

    ReplyDelete