Friday, August 23, 2024

ஆட்டுக்காரனுக்கு ஜமுக்காளம். எல்.முருகனுக்கோ ????

 


விஜயேந்திர சரஸ்வதியை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதாக ஆட்டுக்காரன் புளகாங்கிதத்துடன்  பகிர்ந்து கொண்ட புகைப்படங்களை ஆட்டுக்காரனின் ட்விட்டர் பக்கத்தில் பார்த்தேன்.

 அந்த புகைப்படங்களை பார்க்கையில் ஒரு விஷயம் தெளிவாக தெரிந்தது. ஆட்டுக்காரனுக்கு சரியாசனம் தரப்படவில்லை என்பதை விட மடத்திலோ அல்லது வீட்டிற்குள்ளோ ஆட்டுக்காரனுக்கு தரிசனம் தரப்படவில்லை. கொல்லைப்புறத்தில் வைத்துத்தான் ஆட்டுக்காரனுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டுள்ளது. உள்ளே நுழையும் அளவிற்குமான தகுதிகளோ, அருகதையோ  ஆட்டுக்காரனுக்கு இல்லை போல . . .

 


ஆட்டுக்காரனுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை போலவேதான் எல்.முருகனும் கொல்லைப்புறத்தில் உட்கார வைக்கப்பட்டார். அந்த புகைப்படத்தை தேடி  எடுத்து பார்த்தேன்.

 அப்போதுதான் ஒரு முக்கியமான விஷயத்தை கவனித்தேன்.

 ஆட்டுக்காரன்,எல்.முருகன் இருவரும் வீட்டிற்குள்  அனுமதிக்கப்படவில்லை. இருவரும் கொல்லைப்புறத்தில்   அமர வைக்கப்பட்டாலும்  ஆட்டுக்காரன் உட்கார ஒரு ஜமுக்காளம் போடப்ப்ட்டுள்ளது. ஆனால் பாவம் எல்.முருகனோ தரையில்தான் உட்கார்ந்துள்ளார்.



 ஒரு ஜமுக்காளத்தில்  உட்காரும் அளவிற்குக்கூட எல்.முருகனுக்கு தகுதி கிடையாதா?

 இது தீண்டாமையன்றி வேறில்லை . . .

 

4 comments:

  1. ஒருவேளை,
    எதில் வடிகட்டிய பொய் பேசுகிறார்களோ அதில்தான் அமர வைப்பார்களோ!

    ReplyDelete
  2. முருகன் கழுத்தில் மாலை. இவரே போட்டுக்கொண்டாரா, ‘அவன்’ போட்டதா?

    ReplyDelete
  3. Thiruma valavan பிளாஸ்டிக் chair தா கிடைக்கும் அந்த photo வேணுமா

    ReplyDelete
    Replies
    1. அது அசிங்கம்தான். அந்த போட்டோவை அனுப்பு பார்ப்போம். எப்படி அனுப்புவே? உன் நம்பரையோ மின்னஞ்சல் முகவரியையோ சொல்ல முடியுமா? அப்பறம் நீ இதுக்கு என்ன சொல்ற?

      Delete