Thursday, August 29, 2024

3662 கோடி ரூபாயும் நிர்மலா அம்மையாரும்

 


1956 ல் 5 கோடி ரூபாயும் பின்பு 2011 ல் 95 கோடி ரூபாயும் எல்.ஐ.சி யின் மூலதனமாக  ஒன்றிய அரசு முதலீடு செய்த தொகை. 

அந்த மூலதனத்திற்கு 2023-2024 நிதியாண்டிற்கான லாபத்தில் அரசின் பங்குத் தொகையாக ரூபாய் 3662.17 கோடி ரூபாயை எல்.ஐ.சி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா அம்மையாரிடம் அளித்துள்ளார்கள்.

இவ்வளவு ரூபாயை வழங்கும் எல்.ஐ.சி க்கு அந்த அம்மையார் விசுவாசமாக இருப்பார்களா? எல்.ஐ.சி க்கு உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரமாவது கொடுக்காமல் இருப்பாரா? 

அப்படிப்பட்ட நேர்மையெல்லாம் அந்த அம்மையாருக்கு கிடையாது என்பது சோகமான யதார்த்தம். 

No comments:

Post a Comment