Saturday, August 21, 2021

புளிச்ச மாவு ஆஜானை திட்டாதீங்க

 


"ஆட்டு மந்தை, மாக்கான், கேணை, பெரிய பருப்பு, பொறுக்கி, தற்குறி, தறுதலை" 

நீங்கள் ஜெயமோகனை விமர்சித்தால் உங்களுக்கு இந்த பட்டமெல்லாம் கிடைக்கும்.

ஆம்.

நிஜமாகத்தான். . .

அவரது










ரசிகக் கண்மணிகளில் ஒருவரான சி.எஸ்.கே என்று அழைக்கப்படும் சரவண கார்த்திகேயன் இந்த பட்டங்களை எல்லாம் வழங்கியுள்ள பல்கலைக்கழகம்.

ஜெயமோகனை கடைக்காரர் அடிக்கவெல்லாம் இல்லை. வெறும் வாய்த்தகராறுதான், போலீஸ் கேஸை வலுப்படுத்தவே ஹாஸ்பிடலில் அனுமதியானார் என்று பெரியவர் பாட்டையா பாரதி மணி எழுதிய போதே ஜெயமோகன் ப்வுசு அம்பலமாகி விட்டது.

டெம்போவெல்லாம் வைத்து கடத்தினோம் என்பது போல இந்த பொய் வழக்கிறகு விழுப்புரம் தொகுதி எம்,பி சிபாரிசு வேறு!

ஆஜானின் அபத்தங்களை விமர்சிப்பவர்களுக்கு இத்தனை பட்டம் தருகிறார் சி.எஸ்.கே.

நடக்காத ஒரு சம்பவத்தை வைத்து அனுதாப அலை உருவாக்க முயலும் ஜெயமோகன் வகையறாக்களுக்கு  என்னவெல்லாம் பட்டம் தரலாம்!

அவரை விமர்சிப்பவர்களை எல்லாம் தி.க, கம்யூனிஸ்ட் போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கும் இஸ்லாமியர்கள் என்று பழி சுமத்துகிறாரே, அந்த மத வெறிக்கு என்ன பட்டம் சுமத்தலாம்?

ஆஜான் ஆதரவாளர்களுக்கெல்லாம் அடுத்தவரைப் பேசும் அருகதையே கிடையாது. 


No comments:

Post a Comment