Thursday, December 28, 2023

விடுதலை பெற்றார் விஜயகாந்த்

 



 திரைக்கலைஞர் விஜயகாந்த்திற்கு நெஞ்சார்ந்த அஞ்சலி.

 கருப்பாக இருப்பவர் கதாநாயகனாக முடியாது என்ற பிம்பத்தை உடைத்த இரண்டாமவர்.

 வணிகப்படங்களில் மட்டுமே நடித்தவர் என்றாலும் கூட புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், ரமணா, ஊமை விழிகள் போன்ற சுவாரஸ்யமான பல படங்களை அளித்தவர்.

 பல புதிய இயக்குனர்களை ஊக்குவித்தவர் என்பதும் நடிகர் சங்கத் தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் என்பதும் முக்கியமானது.

 திமுக, அதிமுக வுக்கான மாற்று அரசியல் சக்தியாவேன் என்ற முழக்கத்தோடு அரசியல் புகுந்தவர், அடுத்த தேர்தலிலேயே அதிமுக கூட்டணியில் இணைந்ததும் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததும் பின்பு எந்த கூட்டணியில் இணைவது என்று இரு கட்சிகளோடும் பேச்சு வார்த்தை நடத்தியதும் அவரின் அரசியல் தடுமாற்றத்துக்கு உதாரணம்.

 மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். அதன் தோல்வி காரணமாக அவரது அரசியல் நிலைப்பாடும் சரிவை நோக்கி செல்லத் தொடங்கி விட்டது.

 அவரது இறுதிக்காலம் துயரமானது. அவரது மோசமான உடல்நிலையைக் கூட பொருட்படுத்தாமல் அவரை காட்சிப் படுத்திய மோசமான நிகழ்வெல்லாம் கூட அவரது குடும்பத்தாராலேயே செய்யப்பட்டது.

  வலி மிகுந்த நோய்களிலிருந்தும் தன்னை ஒரு வணிகப் பொருளாக மட்டும் நடத்திய குடும்பத்தாரிடமிருந்தும் அவர் விடுதலை பெற்றுள்ளார் என்பதுதான் உண்மை.

 

No comments:

Post a Comment