Saturday, December 30, 2023

நிர்மலா அம்மையாரே, திருப்பதியில் சொல்லுங்க

 


கோயில் உண்டியலில் பணம் போடாதீர்கள், அப்படி பணம் போடாவிட்டால் இந்து அறநிலையத் துறையை இழுத்து மூடி விடுவார்கள் என்பது கோயில் சொத்துக்களை கொள்ளையடிக்க ஆசைப்படும் சில்லறை சங்கிகள் செய்து வருகின்ற பிரச்சாரம். அந்த சில்லறை சங்கிகள் சொல்வதை தன் வாடிக்கையான ஆணவமான உடல் மொழியில் சொல்லியுள்ளார் நிர்மலா அம்மையார்.

உண்டியலில் பணம் போட வேண்டாம் என்று தமிழ்நாட்டு பக்தர்களிடம் சொல்லும் நிர்மலா அம்மையார், உண்டியல் வசூலில் உலக சாதனையை தக்க வைத்துக் கொண்டிருக்கிற திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களிடமும் சொல்வாரா?

அப்படி சொன்னால் திருப்பதி கோயில் முதலாளிகள் அவரை கோயிலுக்குள் அனுமதிப்பார்களா? ஏன்,  அம்மையாரை ஆந்திராவிற்குள்ளே கால் வைக்கக்கூட அனுமதிக்க மாட்டார்கள்.

 

No comments:

Post a Comment