Friday, December 15, 2023

முற்றிய வெறியின் உச்சம்

 


தென் ஆப்பிரிக்கா அரை இறுதி ஆட்டத்தில் தோற்றதும் சங்கிகள் பகிர்ந்து கொண்ட படம் இது.

 


இட ஒதுக்கீட்டின் மூலம் டெம்பா பவுமா தென் ஆப்பிரிக்காவின் கேப்டன் பொறுப்பிற்கு வந்த காரணத்தால்தான் தென் ஆப்பிரிக்கா அரை இறுதியில் தோற்றுப் போனது என்று வசை பாடுகிறார்கள். மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் கூச்சல் அதிகமாகவே உள்ளது. மகன் தொலைக்காட்சியில் ஆட்டத்தை பார்க்கையில் காதில் விழுந்த வர்ணனையில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தும் பவுமாவை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

 தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீடு உள்ளதா?

 ஆம். இருக்கிறது.

 ஏன்?

 நெல்சன் மாண்டேலா ஜனாதிபதியாகும் வரை தென் ஆப்பிரிக்க நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு  அனைத்து நாடுகளும் தடை விதித்திருந்தது. அவர் பதவிக்கு வந்து வேண்டுகோள் விடுத்த பின்பே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மற்ற நாடுகளுக்கு செல்லத் தொடங்கியது. ஆனால் அந்த அணியின் வீரர்கள் என்னமோ வெள்ளை இனத்தவர்களாக மட்டுமே இருந்தார்களே தவிர கருப்பின மக்கள் ஒதுக்கித்தான் வைக்கப்பட்டனர். அவர்களின் திறமைகள் முடக்கப்பட்டன.

 மக்கள் இயக்கங்களுக்குப் பின்பே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் மற்றவர்களும் பங்கேற்க தொடங்கினர். வெள்ளையர் இல்லாதவர்களும் அணியில் இணைக்க்கப்படுவார்கள், போட்டியில் விளையாடும் பதினோரு பேரில் கருப்பின வீரர்கள் இருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற விதி உருவானது.

 இட ஒதுக்கீடு வந்ததன் பின்னணி இதுதான். ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் முன்னேறி மேலே வர செய்யப்பட்ட ஏற்பாடு அது.

 டெம்போ பவுமா அரை இறுதியில் தோற்றுப் போனதுக்காக வசை பாடப்படுகின்றார். அவரை தென் ஆப்பிரிக்காவில் யாரும் வசை பாடுவதாகவோ, கோட்டா என்று இழிவு படுத்தவோ இல்லை. செய்வதெல்லாம் நம்ம ஊரு சங்கிகள்தான்.

 பவுமா கேப்டனாவதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கா தான் பங்கேற்ற அனைத்து உலகக் கோப்பைகளையும் வென்று விட்டதா அல்லது இறுதிப் போட்டிக்காவது தகுதியானதா?

 இல்லை. நிச்சயமாக இல்லை.

 அரை இறுதியில் தோற்றுப் போவதை தங்களின் பாரம்பரியமாகவே மாற்றிக் கொண்டுவ்ளது, அப்படி தோற்றுப் போன போட்டிகளை கேப்டனாக வழி நடத்தியவர்கள் எல்லோருமே கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள்தானா?

 இல்லை என்பதை அழுத்தமாக சொல்ல முடியும்.

 ஆக சங்கிகளுக்கு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்  அணியை பவுமா எனும் கருப்பினத்தைச் சேர்ந்தவர் கேப்டனாக வழி நடத்துவது மட்டுமே பிரச்சினை. எந்த திறமையும் இல்லாமலா அவர் தன் அணியை அரை இறுதி வரை கொண்டு வந்தார்! போன வருடம் கோப்பையை வென்ற இங்கிலாந்து மிக மோசமாக ஆடி பட்டியலில் கீழே எங்கேயோ போய் விட்டதே! அதற்கு என்ன காரணம்?

 சங்கிகளின் இன வெறி, ஜாதி வெறி, மத வெறி மற்றும் ஜாதி வெறிதான் காரணம், வேறொன்றுமில்லை. அதை அடுத்த நாட்டுக்காரர்கள் மேலும் காண்பிக்கிறார்கள் என்பது  அவர்களின் நோய் முற்றி விட்டதையே காண்பிக்கிறது.

 பிகு: இது ரொம்பவே பழைய பதிவுதான். பகிரத்தான் தாமதமாகி விட்டது.

No comments:

Post a Comment