Thursday, December 14, 2023

புதிய புல்வாமாவிற்கு ஒத்திகையா டிமோ?

 


நேற்று மக்களவையில் நடந்த சம்பவம், தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் நடந்திருந்தால் என்ன ஆயிருக்கும்?

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று ஆட்டுக்காரன் அண்ணாமலையும் ஆட்டுத்தாடி ரெவியும் குதியோ குதி என்று குதித்திருப்பார்கள். 

தான் உயிர் தப்பியது எப்படி என்று வானதி சீனிவாசன் பரபரப்பாக பேட்டி கொடுத்திருப்பார்.

மூத்த்த்த்த்த மாலனும் சங்கி சுமந்தும் தங்கள் அறிவுஜீவி(?!?) ட்வீட்டுகள் மூலம் விஷத்தை கக்கியிருப்பார்கள்.

மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகள் எல்லாம் பாஜக ஐ.டி விங் எழுதிக் கொடுத்ததை எல்லாம் வாந்தி எடுத்திருப்பார்கள்.

ஏன் டெல்லியில் கைதானவர்கள் மஞ்சுநாத்தாகவோ சர்மாவாகவோ இல்லாமல் இஸ்லாமிய, கிறிஸ்துவ பெயருடையவர்களாக இருந்திருந்தால் இந்தியா இன்னொரு கலவரத்தைக் கூட கண்டிருக்கும்!

அப்படியெல்லாம் ஆகவில்லை, நல்ல வேளையாக . . .

இந்த சம்பவம் உணர்த்தும் செய்தி என்ன?

நாடாளுமன்றத்தையே பாதுகாக்க துப்பில்லாத டிமோ அரசு இந்தியாவை பாதுகாக்கும் அருகதையற்றது. 

எனக்கென்னவோ இந்த சம்பவம் புல்வாமா சம்பவம் போன்றதொரு உணர்ச்சிமயமான மனநிலையை உருவாக்க டிமோ கூட்டம் போட்ட சதி என்றே தோன்றுகிறது.

இன்னொரு முறை ராணுவ வீரர்களை கொல்ல முடியாது. அதனால் டிமோ உயிருக்கு ஆபத்து என்ற அச்சத்தை உருவாக்க செய்யப்பட்ட முயற்சி என்று தோன்றுகிறது.

ஆனால் பாவம், அமெச்சூர் ஆட்களை வைத்து முயற்சித்ததால் சொதப்பி விட்டது.

இந்த சம்பவம் ஆட்சியின் தோல்வி என்பதால் சங்கி ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றன. தின மலர் போட்டுள்ள தலைப்பு என்ன தெரியுமா?



"புகை உமிழும் கருவி"யாம்!

இவன் வைக்கும் தலைப்பே, குற்றவாளிகள் யார் என்பதை உணர்த்துகிறது.

அடுத்த நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை இந்தியாவில் எங்கே ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்தாலும் உறுதியோடு சொல்ல முடியும்.

அது பாஜகவின் வேலை. பாஜகவின் வேலை மட்டுமே . .

1 comment: