Wednesday, December 27, 2023

ஜனாதிபதியை கூப்டீங்களா டிமோ?


 சில கேலிக்கூத்துக்கள் டிமோவால் மட்டுமே சாத்தியம்.

 ஜனநாயகத்தின் இருப்பிடம் என்று நம்பப்பட்ட நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவிற்கு சாமியார்களை அழைத்து அதனை ஒரு மத விழாவாக நடத்தினார்  டிமோ.

 இப்போதோ அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை அரசியல் நிகழ்வாக நடத்துகிறார். திருமதி சோனியா காந்தி, தோழர் சீத்தாராம் யெச்சூரி, தோழர் டி.ராஜா  ஆகியோருக்கு அழைப்பனுப்பி வரச் சொல்கிறார். அவர்களும் செல்லப் போவதில்லை  என்று அறிவித்து விட்டனர். அவர்கள் வர மாட்டார்கள் என்று தெரிந்தே அனுப்பப்பட்டது. அப்போதுதானே ஆவர்களை இந்து விரோதிகள் என்று பிரச்சாரம் செய்ய் முடியும்!

 எதிர்க்கட்சிகளுக்கெல்லாம் அழைப்பிதழ் அனுப்பிய டிமோ, இந்தியாவின் முதல் பெண்மணிக்கு அழைப்பிதழ் அனுப்பினாரா?

 அப்படி அவர்களை அழைத்ததாக இதுவரையில் தகவல் இல்லை. எல்.கே.அத்வானிக்கும் முரளி மனோகர் ஜோஷிக்குமே தடை போட்ட டிமோ, புரோட்டாகால் படி தன்னை விட இரண்டு படி உயர்வாக இருக்கிற ஜனாதிபதிக்கு  அழைப்பிதழ் அனுப்ப இனியும் வாய்ப்பில்லை.

 ஏன்?

 காரணம் எளிது.

 நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைக்கப்படாத அதே காரணம்தான்.

 அவர், திருமதி திரவுபதி முர்மு

 பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு கைம்பெண்.

 சகுனம் பார்க்கும் சங்கிகள் அவரை நாடாளுமன்றத்துக்குள்ளோ, அயோத்தி ராமர் கோயிலுக்குள்ளோ எப்படி அனுமதிப்பார்கள்????

 சோனியா காந்திக்கு அழைப்பு அனுப்பப்பட்டதே, அவரும் கைம்பெண்தானே என்று சில சங்கிகள் தங்களை புத்திசாலிகள் என்று நினைத்துகேள்வி கேட்பார்கள்.

 சோனியா காந்தி நிச்சயம் வர மாட்டார் என்பது திட்டவட்டமாக தெரியும் என்பதால் அழைப்பிதழ் போனது.

 ஜனாதிபதி நிச்சயம் வருவார் என்பது திட்டவட்டமாக தெரியும் என்பதால் அழைப்பிதழ் செல்லவில்லை.

 அவ்வளவுதான் . . . 

No comments:

Post a Comment