Friday, August 11, 2023

திருதராஷ்டிரனல்ல, டிமோ காந்தாரி.

 


நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

என்ன காரணம்?

அவர் பேசுகையில் டிமோவை திருதராஷ்டிரனோடு ஒப்பிட்டு மணிப்பூர் பிரச்சினையை பார்க்க மறுக்கிறார் என்று சொன்னதற்காக.

அந்த ஒப்பீடு தவறான ஒன்று.

திருதராஷ்டிரனுக்கு பிறப்பிலேயே பார்வைத் திறன் கிடையாது. அவரை மணந்து கொண்ட காந்தாரிதான் கணவன் பார்க்காத எதையும் தானும் பார்க்கக் கூடாது என்பதற்காக தன் கண்ணைக் கட்டிக் கொண்டவர்.

அது போலத்தான் டிமோவும்  . . .

மணிப்பூர் பிரச்சினையை பார்க்கக் கூடாது என்பதற்காக தன் கண்ணை இறுக மூடிக் கொண்ட அவரை காந்தாரி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

 

No comments:

Post a Comment