Tuesday, August 22, 2023

என்ன நடக்குது குஜராத் ஹைகோர்ட்டில்?

 


குஜராத்தில் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளான ஒரு பெண், அக்கொடுமை மூலம் உருவான கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரிய வழக்கை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. கருவின் தன்மை குறித்தும் கருக்கலைப்பு பாதுகாப்பானதா என்று அறியவும் மருத்துவ சோதனைக்கும் ஆணையிட்டது. 

அப்பெண்ணின் மனு மீதான விசாரணையை தள்ளிப் போட்டு பின்பு நிராகரிக்கவும் செய்திருந்தது குஜராத் உயர் நீதிமன்றம்.

அதனால்தான் பிரச்சினை உச்ச நீதிமன்றத்துக்கும் வந்தது.

உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கு வந்ததும் குஜராத் உயர் நீதிமன்றம் தானாகவே அந்த வழக்கை எடுத்துக் கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணை "குழந்தை பிறந்ததும் அதை நீ வளர்க்கிறாயா அல்லது அரசின் பொறுப்பில் கொடுக்கிறாயா? " என்று கேட்டுள்ளது.

"பாலியல் வங்கொடுமைக்கு ஆளான பெண் அந்த கர்ப்பத்தை சுமக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய வலி தெரியுமா! என்னதான் நடக்குது குஜராத் உயர் நீதிமன்றத்தில்?"

என்று உச்ச நீதிமன்றம் குஜராத் உயர் நீதிமன்றத்தை சாடியுள்ளது.

பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளின் மாநிலம் பிற்போக்குத்தனமாகத்தானே இருக்கும்!

No comments:

Post a Comment