Wednesday, August 9, 2023

இதுதாண்டா டிமோ சாதனை

 




டிமோ அதைக் கிழித்தார், இதைக் கிழித்தார் என்றெல்லாம் சங்கிகள் வாயை திறந்தாலே பொய்களாகவே கொட்டிக் கொண்டிருப்பார்கள்.

டிமோ செய்த உண்மையான சாதனை என்ன தெரியுமா?

இது நாள் வரை

இரு மதங்களை மோத விட்டார்.

இரு ஜாதிகளை மோத விட்டார்,

மொழிகளுக்குள் மோதலை கொண்டு வந்தார்.

மாநிலங்களுக்குள்ளாக மோதலை ஏற்படுத்தினார்.

இப்போது வெற்றிகரமாக துணை ராணுவப் படைக்கும் போலீஸுக்கும் மோதலை உருவாக்கி விட்டார்.

ஆமாம்.

மணிப்பூர் போலீஸ், அஸ்ஸாம் ரைபிள்ஸ் எனும் துணை ராணுவப்படை மீது கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.

குக்கி இனத்தைச் சேர்ந்த மூன்று கொலைகாரர்களை தாங்கள் தேடிப் போன போது அவர்களின் தேடுதல் பணிக்கு இடையூறு விதித்தாக குற்றம் சுமத்தி உள்ளனர். குக்கி இனத்தவருக்கு ஆதரவாகவே அஸ்ஸாம் ரைபிள்ஸ் செயல் படுகிறது என்று வெளிப்படையாகவே சொல்லியுள்ளது.

அஸ்ஸாம் ரைபிள்ஸுக்கெல்லாம் நான் வக்காலத்து வாங்கப் போவதில்லை. ராணுவமும் அதன் துணைப்படைகளும் முந்தைய காலத்தில் மணிப்பூரில் செய்த அட்டூழியம் அப்படி.

டிமோ அலட்சியத்தின் காரணமாக மணிப்பூர் மக்கள் எப்படி பிளவு பட்டு நிற்கிறார்களோ, அதே அரசின் அங்கமான இரு துறைகளும் பிளவு பட்டு நிற்கின்றன. இது நாட்டிற்கு நல்லது. INDIA வந்தால்தான் இந்தியா பாதுகாக்கப் படும்.

No comments:

Post a Comment