Thursday, August 24, 2023

டிமோவை அங்கேயும் மதிக்கலையாம் . . .

 


தென் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியாகும் “டெய்லி மாவெரிக்” என்ற இணைய தள பத்திரிக்கை இணைய ஹேக்கர்களால் இந்தியாவில் தெரியாத வண்ணம் முடக்கப்படிருந்தது.

யார் அப்படி செய்தது?

எதற்காக?

செய்தவர்கள் பாஜகவின் இணையக்கூலிகள். அந்த பத்திரிக்கை வெளியிட்ட ஒரு செய்தியை இந்திய மக்கள் அறியக்கூடாது என்பதற்காக.

அப்படி  என்ன செய்தி?

BRICS உச்சி மாநாட்டிற்காக டிமோ தென் ஆப்பிரிக்கா போன போது அவரை விமான நிலையத்தில் வரவேற்க தென் ஆப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதி செல்லாமல் ஒரு காபினட் அமைச்சர் சென்றுள்ளார்.

சீன ஜனாதிபதியை வரவேற்க தென் ஆப்பிரிக்க ஜனாதிபதியே சென்றார் என்று அறிந்த டிமோ கடுப்பாகி என்னை வரவேற்க வெறும் காபினட் மந்திரியா என்று வெகுண்டு, விமானத்தை விட்டு இறங்க மறுத்து விட்டார். பின்னர் துணை ஜனாதிபதியை அனுப்பிய பிறகுதான் கீழே இறங்கி வந்துள்ளார்.

இந்த செய்தியை இந்தியாவில் இருட்டடிப்பு செய்யத்தான் அந்த பத்திரிக்கையின் இணைய தளத்தை முடக்கியிருக்கிறார்கள்.

(தகவல் உதவி : தோழர் ஆர்.விஜயசங்கர், முன்னாள் ஆசிரியர், ஃப்ரண்ட்லைன்)

நல்ல வேளை அந்த பத்திரிக்கையின் அலுவலகம் உபி யில் இல்லை. இருந்திருந்தால், காலில் விழுந்த ரஜினிகாந்திற்கு ஆசிகள் வழங்கிய மொட்டைச்சாமியார் புல்டோசர் கொண்டு அந்த அலுவலகத்தை இடித்திருப்பார்.


 
மோடிக்கு இவ்வளவுதான் மரியாதை! அதுவும் இந்தியாவின் பிரதமர் என்ற ஒரே காரணத்தால்..

 இந்த உண்மை கூட புரியாத சங்கிகள் உருட்டுகிற உருட்டு இருக்கே!

 அது என்னங்க உருட்டு?

 மாலை பார்ப்போம். . .

 

No comments:

Post a Comment