Saturday, August 5, 2023

பத்து லட்சம் மரங்கள் வெட்டப்படுவது ?????

 


நிக்கோபார் தீவுகளில் புதிதாக ஒரு துறைமுகம், விமான நிலையம், மின் நிலையம் அமைக்கப் போகிறார்கள்.  

 நல்லதுதானே என்று சொல்கிறீர்கள்.

 அதற்காக என்ன செய்யப் போகிறார்கள்?

 என்ன செய்யப் போகிறார்கள்?

 மரங்களை வெட்டப் போகிறார்கள்.

 இது என்ன பெரிய செய்தியா? ஒரு பத்து பனைந்து மரங்களை வெட்டுவார்கள். அவ்வளவுதானே!

 பத்து, பதினைந்து மரங்கள் இல்லை. கிட்டத்தட்ட பத்து லட்சம் மரங்கள்.

 அடப்பாவிகளா! பத்து லட்சம் மரங்களா?

 யாருக்காக இருக்கும்?

 துறைமுகம், விமான நிலையம்,  மின் நிலையம் ஆகிய மூன்றுமே டிமோவின் முதலாளி அதானி செய்யும் வணிகங்கள்தான். அவரைத் தவிர வேறு யாருக்காவது கொடுக்க டிமோ முன் வருவாரா என்ன?

 மரங்களை வளர்க்க வேண்டும், காடுகளை வளர்க்க வேண்டும், சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வதெல்லாம்???

 அதெல்லாம் ஜூம்லா. முதலாளிக்கு சேவை செய்வதை விட அதெல்லாம் முக்கியமா என்ன!!!!!

No comments:

Post a Comment