Tuesday, August 1, 2023

தினமலரே நம்பாது.

 


ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் அவர்களின் பதிவை பகிர்ந்து கொள்கிறேன். அதிலே ஒருவர் தினமலர் பத்திரிக்கையின் அருமை பெருமையை எல்லாம் ஒருவர் எழுதியுள்ளார். நல்ல காமெடி.

 “இதை இட்லின்னா சட்னியே நம்பாது”  என்ற "சூது கவ்வும்" வசனம் போல தின மலர் பத்திரிக்கையே தன்னைப் பற்றி சொல்லப்பட்டதை நம்பாது.


இந்தக் கூத்தையும் படித்து சிரிக்கவும்😂😂😂😂 (போர் வால் தெரியுமா போர் வால்😄)

தினமலர்’ மிக ஆபத்தானது; யாருக்கு?
‘அரசு பள்ளி மாணவ, மாணவியரின் பொதுஅறிவு, வாசிப்புத்திறனை மேம்படுத்த ‘தினமலர்’ நாளிதழை கோவை மாவட்ட அரசு பள்ளிகளுக்கு இலவசமாக வினியோகிக்கலாம்’ என, நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை வழங்கியது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம்.
அவ்வளவுதான், இதற்கு முடிவுரை எழுதுவதாக முகநுாலில் மூக்கை நுழைத்த ஆங்கில பத்திரிகை ஒன்றின் முன்னாள் ஆசிரியர் விஜயசங்கர் என்பவர், ‘இதைநான் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்; நடவடிக்கை எடுப்பதாக ‘நல்ல செய்தி’ வந்திருக்கிறது’ என, ஏதோ புரட்சியாளர் போல புளங்காகிதமடைந்து, தனக்குத்தானே சொரிந்து கொண்டு சுகம் கண்டுள்ளார். இவரைப்போலவே இன்னும் பலரும்... ‘திராவிட போர்வால்’கள் சில வலைதளத்தில் வாலையாட்டி, தினமலருக்கு எதிராக வக்கிரமழை பொழிந்துள்ளனர்.
மக்களை எப்போதும் இருட்டிலேயே வைத்திருக்க விரும்பும் உருட்டுப்புலிகளின் குருட்டுக் விழிகளுக்கு, திமுகவின் கட்சிப் பத்திரிகையான முரசொலி, மாணவர்களின் அறிவுக்கண்களைத் திறக்கும் அறிவுக்கேணியாக தெரிவதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை; அவற்றை பள்ளிகளில், நுாலகங்களில் தாராளமாக வினியோகிக்கலாம்; ஆனால், தினமலர் மட்டும் கூடாது. காரணம் அது, ஆபத்தானது!
ஆம்...
* அது மாணவர் மத்தியில் தேசப்பற்றை வளர்த்துவிடும்.
* லஞ்ச, ஊழலுக்கு எதிரான மனநிலையை விதைத்துவிடும்.
அதனால்தான், தினமலர் திட்டமிட்டு தவிர்க்கப்படுகிறது; தடுக்கப்படுகிறது!
அரசு விளம்பரங்கள் அடியோடு நிறுத்தப்படுகின்றன!
குறிப்பிட்ட ஒரு ஊடகத்தின் மீது நடத்தப்படும் மிக நுட்பமான துல்லிய தாக்குதல் இவை.
இந்த தாக்குதலின் வாயிலாக இவர்கள் சொல்ல வருவது...
* ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டாதே
* அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்தாதே
* தவறான கொள்கை முடிவுகளை விமர்சிக்காதே
* முடிந்தால் ஊமையாகிவிடு; அதுவே, சாலச்சிறந்தது!
என்பதுதான்.
இதற்கெல்லாம் கட்டுப்பட்டால், மறைமுக நெருக்கடிகள் போகும்; விளம்பரங்கள் வரும்!
இந்த மறைமுக மிரட்டல்களுக்கெல்லாம் மண்டியிடாததைக் கண்டுதான், உலகம் முழுவதுமுள்ள லட்சோப லட்சம் வாசகர்கள், மாபெரும் ஆதரவை வழங்கி தினமலருக்கு தோள் கொடுத்து நிற்கிறார்கள்; என்றும் நிற்பார்கள்!

சுப்ரமணிய ஸ்வாமி, கிஷோர் கே ஸ்வாமி வரிசையில் இன்னொரு உருப்படாத ஸ்வாமி

 

No comments:

Post a Comment