Thursday, August 3, 2023

ஹரியானா கலவர அரசியல்

 


ஹரியானாவில் கலவரம். இதுவரை எட்டு பேர் இறந்து போயுள்ளார்கள். அமைதி திரும்புவதாக தெரியவில்லை.

காவிகளின் கலவரப்படைகளான விஸ்வ இந்து பரிஷத்தும் பஜ்ரங் தள்ளும் நூ என்ற ஊரில் நடத்திய பேரணியில் கலவரம் வெடித்துள்ளது. பேரணியின் போதும் அதற்கு முன்பும் இந்த கயவர் கூட்டம் ஏராளமான வெறியேற்றும் காணொளிகளை பரப்பியதாகவும் இஸ்லாமியர்களில் சிலரும் அதே போன்ற வெறியேற்றும் காணொளிகளை எதிர்வினையாக பரப்பினர் என்றும் செய்திகள் சொல்கிறது. கலவரம் எங்கே வெடித்தது? உடனடிக் காரணம் என்ன என்பதில் எல்லாம் குழப்பம் நீடிக்கிறது.

இஸ்லாமியர்களின் திட்டமிட்ட சதி என்று மீண்டும் மீண்டும் சொல்லும் பாஜக முதல்வர் கட்டார், காவிக்கயவர்களின் வெறுப்புப் பேச்சுக்கள், வெறுப்பு முழக்கங்கள் பற்றி பேச மறுக்கிறார். அப்படி பேசினால் அந்தாள் பதவி தப்பாது என்பது வேறு விஷயம்.

ஒரு கோவிலுக்குள் 3000 பக்தர்களை இஸ்லாமியர்கள் பணயக் கைதிகளாக அடைத்து வைத்திருந்தார்கள் என்று சொல்கிறார் உள்துறை அமைச்சர் அனில் விஜ். அதெல்லாம் சுத்த அபத்தம். அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. சிவனின் சக்தியையே அவமானப்படுத்துகிறார் என்று மறுக்கிறார் அந்த கோவிலின் தலைமை பூசாரி. உள்துறை அமைச்சரின் முகத்தைப் பார்த்தாலே கண்களில் கபடம் தெரிகிறது,


 

பேரணி சென்றவர்களிடம் ஆயுதங்கள் இருந்தன, அவர்கள் வெறியூட்டும் வகையில் நடந்து கொண்டார்கள் என்று துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா சொல்கிறார்.

 இப்படி ஏராளமான முரண்பாடுகள்.

 ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது.

 பக்கத்து மாநிலங்களில் தேர்தல் வரும் சூழலில் கலவரங்களை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடும் அயோக்கியத்தனமாக ஹரியானா கலவரத்தை பாஜக தூண்டி விட்டுள்ளது. பயன்படுத்துகிறது.

No comments:

Post a Comment