Wednesday, August 16, 2023

இதற்கு மட்டும் நாங்களா டிமோ ?

 


“பொதுத்துறை நிறுவனங்கள் இறப்பதற்காக பிறந்தவை”.

யாருக்கோ செல்லப்பிள்ளை என்பதற்காக நாங்கள் பொதுத்துறை நிறுவனங்களை நடத்திட வேண்டுமா?”

இந்த இரண்டு முத்துக்களையும் உதிர்த்தவர் அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு தரகு வேலை பார்க்கும் டிமோ.

அதிகமான பசுமை வாயு வெளியிட நாங்கள் முயற்சி செய்வோம் என்று அமெரிக்காவில் டிமோ கொடுத்த உறுதி மொழிக்காக லட்சகக்கணக்கில் மரங்களை நட வேண்டும் என்று பொதுத்துறை நிறுவனங்கள் மீது அநியாயமான அழுத்தம் தரப்படுகிறது.

இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டபிரிவினை கோர நாள்என்ற பெயரில் கண்காட்சிகள் நடத்தும்படி பொதுத்துறை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்படுகின்றன.

பொதுத்துறை நிறுவனங்கள் லாபகரமாக செயல்பட்டால் அதனை தனியாருக்கு விற்றிடுவீர், பங்குகளை விற்பீர், சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க மாட்டீர்கள்.

ஆனால் உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக உங்களின் அஜெண்டாவை நிறைவேற்ற மட்டும் உங்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் வேண்டுமா?

இப்படியெல்லாம் உங்கள் அதிகாரத்தை மோசமாக பயன்படுத்தி பொதுத்துறை நிறுவனங்களை உங்கள் கருவியாக மாற்ற உங்களுக்கு வெட்கமே இல்லையா?

 பொதுத்துறை நிறுவனங்களுக்கு போடும் உத்தரவுகளை தனியார் நிறுவனங்களிடம் போட முடியுமா?

 அப்படி வாய் திறந்தால் என்ன ஆகும் என்று அவருக்கே தெரியும்.

 அவர்கள் சொல்ல மட்டும் செய்தும் காண்பித்து விடுவார்கள்.

 என்ன?

 GO BACK DIMO தான்.

 

No comments:

Post a Comment