Thursday, February 19, 2015

மக்களை நோக்கி, இப்போது சென்னையை நோக்கி



பயணம்


அலைகள் என்றும் கரையை நோக்கி,
பறவைகள் எப்போதும் கூட்டை நோக்கி,
நதியின் பாதையோ சமுத்திரம் நோக்கி,
தேனிக்களின் தேடல் மலர்களை நோக்கி,
வாசகனின் விருப்பம் நூல்களை நோக்கி,
பசித்த வயிறு உணவை நோக்கி,
பன்னாட்டு மூலதனம் லாபத்தை நோக்கி,
இவற்றையெல்லாம் விட
இன்னும் இயல்பானது,
என்றும் உணமையானது.
ஒரு கம்யூனிஸ்ட்டின் பயணம்
என்றுமே மக்களை நோக்கி.

இப்போது எங்களின் பயணம் சென்னையை நோக்கி.
ஆம்
சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ன்
21 வது மாநில மாநாட்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க.

சென்னையில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்கள் மாநாட்டின்
நோக்கத்தைச் சொல்லும்












 

No comments:

Post a Comment