Friday, February 27, 2015

ரயில்வே பட்ஜெட் எனும் மாயமான் வேட்டை

 http://www.greaternoidaweb.in/images/train.jpg

பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாத ரயில்வே பட்ஜெட் என்று பாஜக ஆட்கள் பீற்றிக் கொண்டாலும் எந்த ஒரு புதிய திட்டமோ இல்லை புதிய ரயிலோ இல்லாத, ஏற்கனவே பாதியில் உள்ள திட்டங்களையும் அம்போவென் நிறுத்தியுள்ள ஒரு பட்ஜெட்டாகத்தான் கட்சித்தாவல் புகழ் சுரேஷ் பிரபு வழங்கியுள்ளார் என்பதுதான் உண்மை.

பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது சொற்பத் தொகை. ரயில்வேயில் உள்ள காலியிடங்களை நிரப்புவது பற்றி பேச்சே இல்லை. 

அப்பர் பெர்த்தில் ஏற புதிய படிக்கட்டு, எஸ்.எம்.எஸ் தகவல்கள் ஆகியவை வெறும் ஜோடனை வேலைகள்.

தூய்மை இந்தியா திட்டத்தை அம்லாக்குவோம் என்று வார்த்தையில் சொல்லியுள்ளாரே தவிர  அதற்கான திட்டம் எதுவும் இல்லை. பயோ டாய்லெட் பற்றி பேசப்பட்டுள்ளது. ஆனால் தண்டவாளங்களில் மனிதக் கழிவை கையால் அகற்றுவதை நீக்க என்ன செய்யப் போகிறார்கள்.

பயோ டாய்லெட்டிற்கான நிதியைக் கூட தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி நிதியிலிருந்துதான் அளிக்க வேண்டுமாம்.

மொத்தத்தில் ஒரு வெற்று பட்ஜெட்.  கார்ப்பரேட்டுகளிடம் ரயில்வேயை ஒப்படைக்க அடித்தளம் அமைப்பதற்காக  எந்த புதிய திட்டமும் எங்களால் முடியாது என்று சொல்லியுள்ளார்கள்.

கட்டண உயர்வு கிடையாது என்ற மாய மானை உருவாக்கி அதிலே மக்கள் மயங்கும் நேரத்தில் ரயில்வே துறையை கார்ப்பரேட்டுக்கள் வேட்டையாட களம் உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள்.

1 comment:

  1. PLATFORM TICKET IS GOING TO COST 10/- THIS IS WHAT YOU CAN EXPECT FROM A BJP GOVT.
    LET THEM CLEAN THE RAILWAY COACHES FIRST THEN THEY CAN CLEAN INDIA..

    ReplyDelete