Wednesday, February 25, 2015

மோடியின் வீர வசனம் குருமகா சன்னிதானத்திற்கு பொருந்தாதா?




தன்னலமற்ற சேவை புரிந்த, அனைவரிடத்திலும் அன்பை மட்டுமே வெளிப்படுத்திய, இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக திகழ்ந்த அன்னை தெரசா மீது காவிக்கூட்டத் தலைவன் மோகன் பகவத் நச்சைக் கக்கியுள்ளார். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. விஷத்தை உமிழ்வதுதான் நாகப் பாம்பின் இயல்பு. அதைத்தான் மோகன் பகவத் செய்துள்ளார்.

இதனால் அன்னை தெரசாவிற்கு எந்த இழிவுமில்லை. அவரின் காலடி நிழலில் நிற்கக் கூட தகுதியற்ற மோகன் பகவத்தின் இழி குணம் இன்னொரு முறை அம்பலப்பட்டுள்ளது. இந்த மனிதரின் உரையை முன்பு நேரடி ஒளிபரப்பு செய்த அரசுத் தொலைக்காட்சிக்கு இழிவு. இவர்தம் பாதம் பணிந்து ஆட்சி நடத்தும் மோடி அரசுக்கு இழிவு. இந்த மனிதர் வாழும் நாடாக இருப்பதால் இந்தியாவிற்கு இழிவு.

 மற்ற மதங்கள் மீது துவேஷத்தை பரப்பக் கூடாது
அனைத்து மதங்களும் சமம்

மாற்று மதத்தவர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்


எனது அரசு இதையெல்லாம் சகித்துக் கொள்ளாது
 
என்றெல்லாம் மோடி வீர வசனம் பேசி ஒரு வாரம் முடிவதற்குள் அவரது குரு மகா சன்னிதானம் மோகன் பகவத் இப்படி வெறுப்பை விதைப்பதன் நோக்கம் என்ன தெரியுமா?
 
நடிப்பிற்குக் கூட இப்படியெல்லாம் உளறக்கூடாது என்று மோடியின் தலையில் வைக்கப்பட்ட குட்டுதான் மோகன் பகவத்தின் உரை. நாங்கள் அப்படித்தான் பேசுவோம். விஷத்தைக் கக்குவோம். வெறுப்பை பரப்புவ்வோம், பகைமைத் தீயை விசிறி விடுவோம் என்று காவிக்கூட்டம் அளித்துள்ள பிரகடனம் அது. ஆகவே அண்ணன் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்பதுதான் யதார்த்தம்.
 
நாய் வால் என்றும் நிமிராது.
 


 

No comments:

Post a Comment