Monday, May 6, 2024

தாக்கப்பட்ட பையன் பாஸ், தாக்கியவர்கள்.

 


ஜாதிய வெறியேறிய மாணவர்களால் நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் சின்னத்துரை என்ற மாணவன் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிர் பிழைத்த சம்பவம் நினைவில் உள்ளதல்லவா!

முழுமையாக குணமாகவில்லை. தாக்குதலின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் வெளிவரவில்லை. தங்கையும் தாக்கப்பட்ட துயரம், படிப்பதற்கான உடல் நிலையும் இல்லை, மன நிலையும் இல்லை.

அத்தனையையும் மீறி பனிரெண்டாவது வகுப்பு பொதுத்தேர்வில் சின்னதுரை தேர்ச்சி பெற்று விட்டான். வாழ்த்துக்கள் சின்னதுரை.  மாநிலத்தின் முதல் மதிப்பெண்ணிற்கு நிகரானது சின்னதுரை பெற்ற வெற்றி.

சின்னதுரை தன்னை சந்தித்த பத்திரிக்கையாளர்களிடம் சி.ஏ படிக்க வேண்டும் என்பதே தன் லட்சியம் என்று சொல்லியுள்ளான். அவனுக்கு உள்ள உறுதி, நம்பிக்கை ஆகியவை அவனது இலக்கை அடைய அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

சின்னதுரையை தாக்கியவர்கள் அவனது பள்ளி மாணவர்கள். அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சிறுவர் சீர்திர்திருத்தப் பள்ளிகளில் அவர்கள் சேர்க்கப்பட்டிருப்பார்கள்

அவர்கள் பரிட்சை எழுதியிருப்பார்களா?   எழுதியிருந்தாலும் தேர்ச்சி பெற்றிருப்பார்களா? குற்றவாள்:இ என்ற முத்திரையோடு    அவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

 ஜாதிய வெறியை தூண்டி விட்டவர்கள் சொகுசாகவே இருப்பார்கள். ஆனால் அவர்களால் வெறியூட்டப்பட்டவர்கள் நிலைமைதான் பாவம் ! 

ஆம் எப்போதுமே தூண்டி விடும் அயோக்கியர்கள் தங்கள் பெயர் வெளியே தெரியாமல் உத்தமர்கள் போல நடிப்பார்கள். அதையும் ஒரு முட்டாள் கூட்டம் நம்பும். ஆனால் தூண்டப்பட்டு தவறிழைப்பவர்கள்தான் மாட்டிக் கொண்டு தண்டனை பெறுவார்கள்.

 

No comments:

Post a Comment