Saturday, June 29, 2019

உங்க தலைவிக்கும் சொல்லுங்க அம்மணி



திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி திருமதி மஹுவா மொய்த்ராவின் முதல் மக்களவைப் பேச்சு பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

மோடி அரசு ஒரு பாசிஸ அரசு என்று அவர் சூடாக பேசுகிறதை நானும் காணொளியிலும் பார்த்தேன். நன்றாகத்தான் பேசினார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.  தங்களின் கல்லூரிப் பட்டத்தைக் கூட காண்பிக்க முடியாத அமைச்சர்கள் உள்ள நாட்டில் ஏழை மக்களிடம் தாங்கள் இந்நாட்டு குடிமக்கள் என்பதை நிரூபிக்க என்ன ஆவணம் இருக்கும் என்ற கேள்வி சரிதான்.

மோடி பாசிஸ ஆட்சி நடத்துகிறார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

அதே சமயம் மஹூவா மொய்த்ரா சார்ந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் நடத்துவது என்ன ஜனநாயக ஆட்சியா?

குண்டர்களையும் ரௌடிகளையும் வைத்து ஆட்சி நடத்துகிற மம்தாவின் ஆட்சி மோடி ஆட்சியின் மேற்கு வங்க வெர்ஷன். அவ்வளவுதான்.

முந்தைய பதிவொன்றில் சொன்னது போல இப்போது மேற்கு வங்கத்தில் நடப்பது "பேய்க்கும் பேய்க்கும் சண்டை"

ஆகவே திருமதி மஹூவா மொய்த்ரா அவர்களே  உங்கள் உரையில் சொல்லப்பட்ட அனைத்து நியாயங்களையும் உங்கள் தலைவிக்கும் சொல்லி அவரை திருத்த முயலுங்கள், உங்களால் முடியுமென்றால். 

No comments:

Post a Comment